துவிச்சக்கரவண்டியை மோதித்தள்ளிய உந்துருளி...! 10 வயது பாடசாலை மாணவி பரிதாபமாக உயிரிழப்பு
Sri Lanka Police
Accident
Sri Lankan Schools
By pavan
விபத்து
உந்துருளியும் துவிச்சக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் 10 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (22) பிற்பகல் குளியாபிட்டிய கிரிமெடியாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
முன்னால் வந்த உந்துருளி சாகசங்களை செய்துக் கொண்டு வந்ததால், தான் துவிச்சக்கரவண்டியில் இருந்து பாய்ந்ததாக உயிரிழந்த மாணவியுடன் சென்ற பெண் தெரிவித்துள்ளார்.
விசாரணை
இதன்போது, உந்துருளி துவிச்சக்கரவண்டியை மோதிச் சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்