ராஜபக்ச குடும்பத்தை சட்டத்தின் முன் நிறுத்துங்கள் : எதிர்க்கட்சி எம்.பி கோரிக்கை

By Sathangani Mar 02, 2025 05:01 AM GMT
Report

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் என உயர் நீதிமன்றத்தால் பெயர் குறிப்பிடப்பட்ட மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa), கோட்டபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), பஷில் ராஜபக்ச (Basil Rajapaksa) மற்றும் அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith Nivard Cabraal) ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுங்கள் என  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி (Chaminda Wijesiri) தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் பொய்யாக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (01) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எழுந்த சர்ச்சை...! யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு

எழுந்த சர்ச்சை...! யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு

2022ஆம் ஆண்டு போராட்டம்

அவர் மேலும் தெரிவிக்கையில், “பொய்யுரைப்பதும் ஜனநாயக உரிமை என்று குறிப்பிட்ட சட்டத்தரணிகளும் ஆளும் தரப்பில் உள்ளார்கள். வன்முறைகளுக்கு இடமளிக்க முடியாது என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

ராஜபக்ச குடும்பத்தை சட்டத்தின் முன் நிறுத்துங்கள் : எதிர்க்கட்சி எம்.பி கோரிக்கை | Action Against Rajapaksa Family Economic Murderers

ஆனால் 2022ஆம் ஆண்டு போராட்டத்தின் போது நாடாளுமன்றத்தை கைப்பற்றி, நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பதற்கு வந்தவர்கள் தான் தற்போது அரசாங்கத்தை கைப்பற்றியுள்ளார்கள் என்பதை நினைவுபடுத்த வேண்டும்.

அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு புரிந்துணர்வுடன் பொய்யுரைத்தார்கள். இன்றும் பொய்யுரைக்கிறார்கள். சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டே மக்கள் அதிகாரத்தை வழங்கினார்கள். ஆகவே அரசாங்கத்தின் இருப்பு நீதியமைச்சிலேயே தங்கியுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த காலங்களில் ஊழல் மோசடி தொடர்பில் தன்னிடம் 400 கோப்புக்கள் இருப்பதாக குறிப்பிட்டார். அவற்றின் ஒருசிலவற்றை வெளிப்படுத்தினார். அந்த கோப்புக்களுக்கு என்ன நேர்ந்தது.

பதற்றத்தில் நாட்டு மக்கள்..! எரிபொருள் விநியோகம் தொடர்பில் புதிய அறிவிப்பு

பதற்றத்தில் நாட்டு மக்கள்..! எரிபொருள் விநியோகம் தொடர்பில் புதிய அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரணில் 

எதிர்வரும் காலங்களிலாவது அந்த ஊழல்மோசடி தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுமா, இந்த நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களின் பெயர்களை உயர்நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியுள்ளது. அவர்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் என்ன?

ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் மக்கள் விடுதலை முன்னணி ஊழல்வாதிகளுடன் ‘டீல்’ வைத்திருந்ததை மக்கள் அறியவில்லை.

ராஜபக்ச குடும்பத்தை சட்டத்தின் முன் நிறுத்துங்கள் : எதிர்க்கட்சி எம்.பி கோரிக்கை | Action Against Rajapaksa Family Economic Murderers

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), ஒருமுறை நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது தற்போதைய ஜனாதிபதி அநுரகுமாரவை (Anura Kumara) நோக்கி “உங்களின் அனைத்து விடயங்களையும் நான் அறிவேன் அவற்றை சொன்னால் கட்சியும் இல்லாமல் போகும், நாட்டை விட்டு வெளியேற நேரிடும்” என்று குறிப்பிட்டார்.

அதற்கு இன்றுவரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதிலளிக்கவில்லை. ஆளும் தரப்பிலும் ஊழல் மோசடியாளர்கள் உள்ளார்கள் பேச்சினால் மாத்திரம் நாட்டை முன்னேற்ற முடியாது. சட்டத்தை இயற்றி ஊழல்வாதிகளை சட்டத்தின் முன்னிறுத்துங்கள்.

சங்கில் இணையும் ஈ.பி.டி.பி...! வெளியேறும் மணிவண்ணன் அணி

சங்கில் இணையும் ஈ.பி.டி.பி...! வெளியேறும் மணிவண்ணன் அணி

தொழில்வாய்ப்புக்களை வழங்கியவர்

இன்றுவரை ஒரு ஊழல் மோசடியாளர்களை கூட சட்டத்தின் முன் நிறுத்தவில்லை. அரசாங்கத்தின் முன்னிலையில் உள்ளவர்களின் குடும்பத்தாருக்கு மகிந்த ராஜபக்சவே தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தார். ஆனால் இன்று அவரை திருடன், திருடன் என்று விமர்சிக்கின்றீர்கள்.

நாடாளுமன்ற குழுக்கள் ஊடாக வெளிப்படுத்தப்படும் ஊழல் மோசடிகளை வெறும் செய்தியாக்காமல் உரிய சட்டங்களை இயற்றி உரிய நடவடிக்கை எடுங்கள். இதற்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

ராஜபக்ச குடும்பத்தை சட்டத்தின் முன் நிறுத்துங்கள் : எதிர்க்கட்சி எம்.பி கோரிக்கை | Action Against Rajapaksa Family Economic Murderers

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டபய ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கப்ரால் ஆகியோர் பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீ திமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இவர்களுக்கு எதிராக சட்டத்தின் ஊடாக அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுத்து ஊழல்வாதிகளை பாதுகாக்க போவதில்லை என்று மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்“ என தெரிவித்தார்.

சிக்குவாரா கோட்டாபய! அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு

சிக்குவாரா கோட்டாபய! அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024