அதிசயம் : 10 நாட்களுக்குப் பின்னர் நேபாளத்தில் 64 வயது மூதாட்டி உட்பட இருவர் உயிருடன் மீட்பு
நேபாள வெள்ளத்தில் சிக்கிய 64 வயது மூதாட்டி மற்றும் சீனாவைச் சேர்ந்த சுரங்கத் தொழிலாளி ஆகிய இருவர், 10 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று சுரங்கத்தில் இருந்து 2 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 10 நாட்களுக்குப் பிறகு, சீனாவைச் சேர்ந்த சுரங்கத் தொழிலாளி இன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
சீனாவைச் சேர்ந்த சுரங்கத் தொழிலாளி
நேபாள இராணுவம் மற்றும் தென்கொரியாவின் பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து மேற்கொண்ட மீட்பு பணியில், அந்த நபர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள இராணுவம் தெரிவித்துள்ளது.

சுரங்கத்திற்கு உள்ளே சுமார் 225 மீட்டர் தொலைவில் இருந்து மீட்கப்பட்ட நபர்,உலங்கு வானூர்தி மூலம் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
64 வயது மூதாட்டி
அதேபோல, நுவாகோட் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீட்டில் இருந்து சந்திகா ஸ்ரேஷ்தா என்ற 64 வயது மூதாட்டியை மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர்.
போர்வையில் சுற்றியபடி மீட்கப்பட்ட அந்த மூதாட்டி உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான காணொளிகள் வைரலான நிலையில், பலரும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை