பசிலிடம் சிக்குண்ட ரணில் - மீண்டும் பழைய நிலைக்கு..!!
தற்போதைய அரசாங்கத்தின் பிரதமராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கவின் உயிர் பசில் ராஜபக்சவிடமே இருக்கின்றது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாத்தளையில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட மாாநட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மகிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவண்ண, சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் நாளை அமைச்சுப் பதவிகளை ஏற்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக ராஜபக்சவினரை பாதுகாப்பதற்காக ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். மக்கள் நிராகரித்த இரண்டு தலைவர்களே தற்போது நாட்டை ஆட்சி செய்து வருகின்றனர்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்குச் செல்லுமாறு மக்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ரணில் விக்ரமசிங்கவை மக்கள் கடந்த பொதுத் தேர்தலில் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மக்கள் எதிர்பார்ப்பதை இவர்கள் இருவரால் செய்ய முடியாது.
தற்போது அரசாங்கம் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்து வருகிறது. பழைய மோசடியான அரசியலை இவர்கள் மீண்டும் செய்து வருகின்றனர்” என்றார்.



ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
