கனடாவுக்கு புலம்பெயர விரும்புபவர்களுக்கு முக்கிய இடம்பிடித்துள்ள ‘வயது’
கனடாவிற்கு புலம்பெயர விரும்புபவர்களுக்கான வயது
கனடாவிற்கு புலம்பெயர விரும்புபவர்களுக்கு வயது எவ்வளவு தூரம் முக்கிய இடம் வகிக்கிறது என்பது பலருக்கு தெரியாத விடயமாக உள்ளது. ஏனெனில் தற்போது கனடாவில் பணியில் இருக்கும் பலர் அடுத்த சில வருடங்களில் ஓய்வு பெறவுள்ள நிலையில் அந்த இடத்திற்கு புதியவர்களை நியமிக்க இள வயதினரையே கனடா விரும்புகிறது.
எனவே 44 வயதிற்கு மேறபட்டவர்களின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படுவது பெரும்பாலும் குறைவானதாகவே காணப்படுகிறது. இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்
எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டம்
எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டத்தின் கீழ், CRS என்பது, புள்ளிகள் அடிப்படையில் கனேடிய நிரந்தர குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கும் ஒருவரை தரவரிசைப்படுத்தும் அமைப்பாகும். இந்த CRS என்னும் விரிவான தரவரிசைப்படுத்தும் அமைப்பில், குறிப்பிட்ட புள்ளிகளுக்கு மேல் பெற்றால் மட்டுமே, விண்ணப்பம் செய்வதற்கான அழைப்பு உங்களுக்கு விடுக்கப்படும்.
CRSஇல் அதிகபட்சம் 1,200 புள்ளிகள். இந்த தரவரிசைப்படுத்தலில் பல காரணிகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அவை, கல்வித்தகுதி, ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழித்திறன், பணி அனுபவம் முதலானவையாகும். தனிநபர்கள் எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டத்தின் வாயிலாக விண்ணப்பிக்கும்போது அவர்களுக்கு அதிக புள்ளிகள் கிடைக்கும்.
வயது மிகப்பெரிய தடை
ஆனால், இந்த தரவரிசைப்படுத்தலில், வயது மிகப்பெரிய தடையாக உள்ளது. 44 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புள்ளிகள் கணிசமாக குறைகின்றன. கனடாவின் CRS என்னும் விரிவான தரவரிசைப்படுத்தும் அமைப்பில், 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு புள்ளிகளே கொடுக்கப்படாது. 29 வயது உடைய ஒருவருக்கு வயது அடிப்படையில் அதிகபட்சமாக 110 புள்ளிகள் வழங்கப்படும். 39 வயது என்றால், அவர்களுக்கு 55 புள்ளிகள், 45 வயது என்றால் பூஜ்யம் புள்ளிகள்.
கனடாவில் தற்போது பணியில் இருக்கும் ஒரு பெரிய எண்ணிக்கையிலான கூட்டத்தார், அடுத்த சில ஆண்டுகளில் ஓய்வு பெற இருக்கிறார்கள்.
அந்த இடத்தை நிரப்ப, கனடா இளைஞர்களை தேடிக்கொண்டிருக்கும் நிலையில், வயது அதிகம் உள்ளவர்களை விட, இளம் வயதினருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.