தலைசிறந்த பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார்
Karnataka
Death
S Janaki
By Jaso
இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகி எஸ். ஜானகி வயது மூப்பு காரணமாக இன்று கர்நாடக மாநிலத்தின் மைசூரில் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
88 வயதான இவர் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தனது காந்த குரலால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.
நான்கு முறை தேசிய விருதுகள்
தமிழ் சினிமாவின் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.

இவர் நான்கு முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளிலும் பாடியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்