ஈரான் மீது 1000 ஏவுகணைகள் பாயும்: ட்ரம்ப் எச்சரிக்கை: ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்
தொடர்ந்து மூன்றாவது இரவாக உலகின் மிக முக்கிய வர்த்தக நீர்வழியான ஹோர்முஸ் நீரிணை வழியாகப் போக்குவரத்து குறைந்துள்ளதாக கப்பல் போக்குவரத்தை கண்காணிக்கும் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
உலக எரிசக்தி சந்தைகளுக்கு மிக முக்கியமான நீர்வழியான ஹார்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்துக்குத் திறந்திருப்பதாகவும், கப்பல்கள் தடையின்றி செல்லலாம் என்றும் ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று வாஷிங்டன் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இந்த விடயம் வெளியாகி உள்ளது.
ஜூலை 9 மற்றும் 10- ஆம் திகதிக்கு இடையில், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிகப் போக்குவரத்து தொடர்ந்து மூன்றாவது இரவாகக் குறைந்திருந்தது.
கொலை செய்ய ஈரான் முயற்சி
சில நாட்களுக்கு முன்பு வரை வழக்கமாக 18 முதல் 22 கப்பல்கள் அந்த நீர்வழியைக் கடந்து சென்ற நிலையில், தற்போது 12 மணி நேரத்திற்குள் வெறும் ஆறு கப்பல்கள் மட்டுமே கடந்து சென்றதாக அது கூறுகிறது.

அதே நேரத்தில், கப்பல்கள் தங்கள் பயணம் செய்வதை மறைப்பதற்காக டிரான்ஸ்பாண்டர்களை அணைத்து விடும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும் விண்ட்வார்ட் நிறுவனம் கூறுகிறது.
தன்னைக் கொலை செய்ய ஈரான் முயற்சித்தால், ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியான என்னை, படுகொலை செய்வோம் அல்லது படுகொலை செய்ய முயற்சிப்போம் என்ற தனது அச்சுறுத்தலை ஈரான் அரசாங்கம் செயல்படுத்தினால், 1000 ஏவுகணைகள் ஈரான் இஸ்லாமியக் குடியரசை நோக்கித் தயார் நிலையில் வைக்கப்பட்டு குறிவைக்கப்பட்டுள்ளன; மேலும் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் உடனடியாகப் பின்தொடரும்!" என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |