அரசாங்கத்தின் குற்றத்தடுப்பு நடவடிக்கை! கடும் ஆவேசத்தில் நாமல்
அதிகரித்து வரும் பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியது ஆகியவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக, அரசாங்கம் இளைஞர்களைக் கைது செய்வதையும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளையும் பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
அண்மையில் கோட்டையில் இடம்பெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கத்தின் கொள்கைகள் தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கும், வேலை இழப்புகளுக்கும், வாழ்க்கைச் செலவு உயர்வதற்கும், முதலீட்டாளர் நம்பிக்கை குறைவதற்கும் வழிவகுத்துள்ளதாகக் தெரிவித்துள்ளார்.
பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு
அத்தோடு, சட்ட நடைமுறையாக்க நடவடிக்கைகள் மூலம் இளைய தலைமுறையினரை அரசாங்கம் குறிவைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தலுக்கு முன்பு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட பட்டதாரிகள், அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு வேலை தேடியபோது, அதற்கு மாறாக காவல்துறை நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளதாக நாமல் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிகரித்து வரும் வரிகள், அதிக கடன் வாங்கும் செலவுகள் மற்றும் அதிகரித்த உற்பத்திச் செலவுகள் ஆகியவற்றால் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தவிப்பதாகவும், இதனால் பல வணிகங்கள் மூடப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறைச்சாலை சம்பவம்
இதேவேளை, இலங்கையின் பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழந்து வருவதாகவும், போதுமான அரசாங்க ஆதரவின்றி சுற்றுலாத் துறை கூடுதல் அழுத்தத்தை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சமீபத்திய சிறைச்சாலை சம்பவம் குறித்துக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ச, நீதி அமைச்சர் முகநூல் மூலமாக மட்டுமே இச்சம்பவம் பற்றி அறிந்து கொண்டதாகவும், பல மணி நேரம் அதுபற்றி அறியாமல் இருந்ததாகவும் கூறி, அரசாங்கத்தின் பதிலை விமர்சித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |