சிறிலங்காவின் பாடாசாலை மாணவர்களுக்கு அமெரிக்கா வழங்கிய உதவி..!
இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு உணவளிக்க அமெரிக்கா 320 மெற்றிக் தொன் கடலைப் பருப்பினை நன்கொடையாக வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் விவசாயத் திணைக்களத்தின் ஊடாக Save the Children நிறுவனத்துடன் இணைந்து இன்று (26) இந்த உணவுத் தொகை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் கையளிக்கப்பட்டதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
அமெரிக்க தூதுவர்
இதேவேளை, இது தொடர்பில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கும் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.
அதில், "இன்றைய நன்கொடை பசியின் ஆபத்தில் இருக்கும் இலங்கையின் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டமளிக்கும். இந்த நன்கொடையானது சுதந்திரத்திற்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு அனைத்து இலங்கையர்களுக்கும் உதவுவதற்கான அமெரிக்காவின் பெரிய முயற்சிகளின் ஒரு பகுதியாகும்" என அவர் குறிப்பிட்டிருந்தார்.
Today’s donation of 320 metric tons from @USDA in partnership with @SCISL will nourish ?? schoolchildren most at risk of hunger. The donation is part of larger US efforts to help all Sri Lankans emerge from the worst economic crisis since independence.https://t.co/8UEYpb3xWo pic.twitter.com/lxZxKf9Ld8
— Ambassador Julie Chung (@USAmbSL) August 26, 2022

