ட்ரம்பின் அறிவிப்பால் அதிர்ச்சியில் அமெரிக்காவிலுள்ள வெளிநாட்டவர்கள்
“தி ஒன் பிக் பியூட்டிபூல் பில்” என்ற புதிய மசோதாவை அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) நிர்வாகம் வரையறுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர்.
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகு அவர்களின் பல்வேறு உரிமைகள் மற்றும் சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.
புதிய மசோதா
இந்தநிலையில், “தி ஒன் பிக் பியூட்டிபூல் பில்” என்ற புதிய மசோதாவை டிரம்ப் நிர்வாகம் வரையறுத்துள்ளது.
இதில் வெளிநாட்டினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வரிகள் விதிக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினர், தங்களது சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்பினால் ஐந்து சதவீதம் வரி விதிக்கப்படும் என புதிய மசோதாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கிரீன் கார்டு மற்றும் எச்1பி, எச்2ஏ மற்றும் எச்2பி விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றும் சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் அதிர்ச்சி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
