யாழில் வெட்டி கொலை செய்யப்பட்ட மூதாட்டி! மூவர் கைது
Jaffna
By Pavan
யாழ்ப்பாணம் அல்வாய் கிழக்கு அல்வாய் பகுதியில் கடந்த ஒக்டோபர் 5ம் திகதி மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை இடம்பெற்று உடற்கூற்று மாதிரிகள் அரச பகுப்பாய்வுக்காக சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா அனுப்பி வைத்திருந்தார்.
அதன் அறிக்கையில் மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்படுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்னிலை

குறித்த மூதாட்டியை பராமரித்துவந்த இருவர் வீட்டு வேலையாள் அடங்கலாக மூவரை சந்தேகத்தின் அடிப்படையில் நெல்லியடி காவல்துறையினர் நேற்று (9) கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தேகநபர்களை இன்று (10) பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 10 மணி நேரம் முன்