இந்திய முப்படைக்கு புதிய தலைமை தளபதி நியமனம் - யார் இந்த அனில் செளஹான்..!
India
Lt Gen Anil Chauhan
By Vanan
முப்படைகளின் தலைமை தளபதி
இந்திய முப்படைகளின் தலைமை தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் அனில் செளஹான் நியமிக்கப்பட்டுள்ளார்.
முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் நீலகிரியில் நடந்த ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து தற்போது புதிய தலைமை தளபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
40 ஆண்டுகள் இராணுவ பணி
இந்திய இராணுவத்தின் கிழக்கு பிரிவுக்கு தளபதியாக இருந்த அனுபவம் கொண்ட அனில் செளஹான், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் பதற்றமான சூழல்களில் திறம்பட பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 40 ஆண்டுகள் வரை இராணுவத்தில் பணியாற்றி, லெப்டினென்ட் ஜெனரலாக அனில் செளஹான் ஓய்வு பெற்றவர் ஆவார்.
நாட்டின் இராணுவ விவகாரத் துறை செயலாளராகவும் அனில் செளஹான் பொறுப்பு வகிப்பார் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்