பிரித்தானியாவில் நடைபெற உள்ள புனித அந்தோனியாரின் ஆண்டுப் பெருவிழா
London
By Kiruththikan
புனித அந்தோனியாரின் ஆண்டுப் பெருவிழா பிரித்தானியாவின் உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் இடம்பெற உள்ளது.
உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள புனித அற்புத அந்தோனியார் ஆலயத்தில் வருகின்ற யூன் மாதம் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது.
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் இத்திருவிழாவானது திருநாள் செபமாலை, திருநாள் திருப்பலி, திருச்சிலுவை சுற்றுப்பவனி, திருச்சொரூப ஆசீர்வாதம் என்று முழுமையான திருநாள் விழாவாக நடைபெற ஏற்பாடாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.