யாழ்ப்பாணம் வலிவடக்கில் இராணுவத்தால் அழிக்கப்படும் பனை மரங்கள்

Sri Lanka Army Sri Lankan Tamils Jaffna
By Theepan Feb 03, 2026 05:56 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள மக்களின் விவசாய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ் . மாவட்ட செயலர் ஆகியோருக்கு மாவட்ட கட்டளை தளபதி உறுதி அளித்துள்ள அதே நேரம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள காணிகளில் இராணுவம் விவசாயம் செய்வதற்காக தனியார் காணிகளில் உள்ள பனை மரங்களை தறித்து வருகின்றது.

இது தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தனிடம் தொடர்புகொண்டு கேட்ட போது,

 இராணுவத்தினர் விவசாயம் செய்ய பனைமரங்கள் அழிப்பு

வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட பகுதிகளில் 15 கிராம சேவையாளர் பிரிவுகள் முற்றாக விடுவிக்கப்பட வேண்டும். அந்த நிலையில் மயிலிட்டி வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் ஒரு பகுதி விடுக்கப்பட்டுள்ள நிலையில் , மற்றைய பகுதி விடுவிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. அந்த நிலங்களில் இராணுவத்தினர் தோட்டங்களை செய்து வருகின்றனர்.

யாழ்ப்பாணம் வலிவடக்கில் இராணுவத்தால் அழிக்கப்படும் பனை மரங்கள் | Palm Trees Being Destroyed By Military In Jaffna

இந்த நிலையில் விமான நிலையத்திற்கு மேற்கு பக்கம் உள்ள பகுதியில் பெருமளவான பனை மரங்கள் இன்றைய தினம் (03)செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டு , இராணுவத்தினர் தாம் விவசாயம் செய்வதற்காக அந்த நிலங்களை தயார்படுத்தி வருகின்றனர்

பனை அபிவிருத்தி சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

பொதுமக்கள் தமது காணிகளில் உள்ள பனை மரங்களை அனுமதியின்றி தறித்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து தண்டங்கள் அறவிடப்படும் நிலையில் , இராணுவத்தினரால் பனை மரங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக பனை அபிவிருத்தி சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை தடுத்து நிறுத்தி பனை வளங்களை பாதுகாக்க வேண்டும்.

யாழ்ப்பாணம் வலிவடக்கில் இராணுவத்தால் அழிக்கப்படும் பனை மரங்கள் | Palm Trees Being Destroyed By Military In Jaffna

பெருமளவான பனை மரங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக மாவட்ட செயலர் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலர் ஆகியோர் இராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆட்சி மாற்றங்கள் ஊடாக தமது காணிகள் விடுவிக்கப்படும் என மக்கள் நம்பி தேசிய மக்கள் சக்தியினருக்கு வாக்களித்தனர். அதனாலயே அவர்களில் மூவர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவானார்கள்

ஜனாதிபதியின் யாழ் விஜயத்தில் எதிர்பார்ப்பில் காத்திருந்த மக்கள்

ஜனாதிபதி தைப்பொங்கல் நிகழ்வுக்கு யாழ்ப்பாணம் வருகை தந்த போது காணிகள் விடுவிக்கப்படும் , வீதிகள் திறக்கப்படும் என தமிழ் மக்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தார்கள். மக்களின் நம்பிக்கையை சிதறடிக்கும் முகமாக ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகை தந்த போது காணி விடுவிப்புக்கள் தொடர்பில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காது சென்றார்

யாழ்ப்பாணம் வலிவடக்கில் இராணுவத்தால் அழிக்கப்படும் பனை மரங்கள் | Palm Trees Being Destroyed By Military In Jaffna

மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என உயர் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் , கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் , காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் , விடுவிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பான வரைபடங்களை தாம் தயாரித்து வருவதாகவும் இராணுவத்தினர் நீதிமன்றில் தெரிவித்துள்ள நிலையில் , தற்போது தாம் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்களின் காணிகளில் உள்ள பனை மரங்களை அழித்து வருகின்றனர்.

எனவே மக்களின் காணிகளில் உள்ள பனை மரங்களை பாதுகாக்க மாவட்ட செயலர் , பனை அபிவிருத்தி சங்க தலைவர் வடமாகாண ஆளுநர் ஆகியோர் இது தொடர்பில் நடவடிக்கை எடுத்து , பனை மரங்களை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்தார். 

யாழில் தனியார் காணியொன்றில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள்

யாழில் தனியார் காணியொன்றில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள்

யாழில் மீன்பிடிக்கச் சென்ற கடற்றொழிலாளர் மாயம்!

யாழில் மீன்பிடிக்கச் சென்ற கடற்றொழிலாளர் மாயம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Basel, Switzerland, Reigoldswil, Switzerland

11 Feb, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், நீர்வேலி, Neuilly-sur-Marne, France

21 Jan, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, பேர்லின், Germany

19 Jan, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, தண்ணீரூற்று, Toronto, Canada

30 Jan, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Montreal, Canada, Vancouver, Canada

31 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, சரவணை, புங்குடுதீவு, Paris, France

31 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், கண்டி, Enugu, Nigeria, Toronto, Canada, Los Angeles, United States

28 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Brampton, Canada

30 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில்

03 Feb, 2016
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
மரண அறிவித்தல்

சூராவத்தை, உயரப்புலம்

30 Jan, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Chigwell, United Kingdom

26 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018