கொக்குவில் தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு மற்றுமொரு உதவி
கொக்குவில் தொழில்நுட்பவியல் கல்லூரியில் கற்கும் மாணவர்கள் பல்வேறு வளப்பற்றாக்குறையுடன் தமது கற்றல் செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஐபிசி குழுமத்தின் பணிப்பாளர் கந்தையா பாஸ்கரன் அவர்கள் புலம்பெயர் தேசத்தவர்களிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தார்.
மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கு உதவி

அதாவது வளப்பற்றாக்குறையுடன் கற்கும் எமது மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கு உதவியளிக்குமாறு கோரியிருந்தார்.
அவரின் கோரிக்கையை ஏற்று புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பத்து கணனிகள் அன்பளிப்பு

அந்த வகையில் தற்போது இலண்டன் பல்கலைக்கழக விரிவுரையாளரான கலாநிதி கோணேஸ் பத்து கணனிகளை கல்லுரிக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.
கல்லூரி சமுகம் நன்றி

இந்த கணனிகள் கிடைக்கப்பெற்ற நிலையில் இதற்கு உதவிய ஐபிசி குழுமத்தின் பணிப்பாளர் கந்தையா பாஸ்கரன் மற்றும் கணனிகளை தந்துதவிய விரிவுரையாளர் கலாநிதி கோணேஸ் அவர்களுக்கு கல்லூரி சமுகம் தனது நன்றியை தெரிவித்துள்ளது.