மீண்டும் சிக்கல் - ரணிலுக்கு எதிராக பாயவுள்ள வழக்கு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) எதிராக இன்னுமொரு மோசடி சம்பவம் தொடர்பில் முறைப்பாடு மேற்கொள்ளப்படவுள்ளது.
காவல்துறை நிதிமோசடிப் பிரிவில் குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட 1600 மில்லியன் ரூபா மோசடியொன்று தொடர்பாக குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியல்
இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர்களில் ஒருவரான சிசிர சேனாதிபதியும் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
இதேவேளை பொது நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஓகஸ்ட் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) பிணை வழங்கி கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக மற்றொரு மோசடி சம்பவம் தொடர்பில் முறைப்பாடு மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
