வடக்கின் அபிவிருத்தி குறித்து பச்சை கொடி காட்டும் அநுர அரசு: வடக்கு ஆளுநர்
மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) தலைமையிலான அரசாங்கம் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் எமது மாகாணத்தை நாம் துரிதமாக அபிவிருத்தி செய்துகொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன்(N. Vethanayagan) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கான palliative care கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,“ மாகாண அபிவிருத்திக்கான இது போன்றதொரு சந்தர்ப்பத்தை நாம் இழக்கக் கூடாது.
மருத்துவமனைக்கான உதவி
சுயநலம் மலிந்த இந்தக் காலத்தில் மற்றையவர்களுக்கு உதவி செய்பவர்கள் அருகிச் செல்கின்றனர்.
அவ்வாறானதொரு நிலைமையில் மருத்துவமனைக்கு உதவியைச் செய்வதற்கு முன்வந்தவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே.
புலம்பெயர்ந்து சென்றாலும் எமது மண்ணுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய விரும்பும் அவர்களது எண்ணம் மிகப்பெரியது.
தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனைக்கான தேவைகள் இன்னமும் நிறைய இருக்கின்றன. அவையும் விரைவில் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
[AWONGYB ]
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![Gallery](https://cdn.ibcstack.com/article/7b1729fd-920c-49e9-8532-084b8da0fb0f/25-67af357e8d07e.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/f0d6dd65-06e3-446e-8939-ca9006089bb3/25-67af357f2446b.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/af62f434-72cd-4f0c-8294-3604ad674bde/25-67af357fac211.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/e8c08200-3f25-44a4-869b-853abd874b9b/25-67af3580502ba.webp)
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)