பதவிகளைத் தக்க வைப்பதற்காக நாடகமாடும் அநுர அரசு : முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

Missing Persons Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka Janatha Vimukthi Peramuna Harini Amarasuriya
By Sathangani Apr 15, 2025 07:10 AM GMT
Report

இலங்கையில் ஜேவிபி தோழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு தீர்வை முன்வைக்க முடியாத தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு எவ்வாறு தீர்வை பெற்று தருவார்கள் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் பொதுச்செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) யுத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியை உள்ளூர் பொறிமுறையின் மூலம் பெற்றுத் தருவதாக தெரிவித்த கருத்து தொடர்பில் பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வவுனியாவில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞர் பலி : சடலத்தை ஏற்க மறுத்த வைத்தியசாலை

வவுனியாவில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞர் பலி : சடலத்தை ஏற்க மறுத்த வைத்தியசாலை

உள்ளூர் பொறிமுறை மூலம் தீர்வு

அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணத்திலும் தென்னிலங்கையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் பொறிமுறையின் மூலம் தீர்வைத் தரப்போவதாக ஊடகங்களில் கருத்துக்களை அவதானித்தோம்.

பதவிகளைத் தக்க வைப்பதற்காக நாடகமாடும் அநுர அரசு : முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு | Anura Govt Drama Justice For The Missing Persons

இறுதி யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்த நிலையில் இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களை இராணுவத்திடம் விசாரணைக்காக கையில் கொடுத்தோம் இன்று வரை அவர்களுக்கு என்ன நடந்தது என அவர்களைத் தேடி அலையும் உறவுகளுக்கு தெரியாது.

தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என வீதி வீதியாக பல போராட்டங்களை உறவுகள் மேற்கொண்டும் இன்று வரை பொறுப்பு கூற வேண்டியவர்கள் பதில் வழங்காது மௌனம் காத்து வருகின்றனர்.

இலங்கை அரசாங்கம் உள்ளூர் விசாரணை மூலம் தீர்வை தருகிறோம் என காலத்துக்கு காலம் மாறி வரும் அரசாங்கங்கள் வாக்குறுதிகள் வழங்கி வரும் நிலையில் அதனை நாம் துளியளவும் ஏற்கவில்லை.

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து : 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து : 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

சர்வதேச விசாரணை

நாம் உள்ளூர் விசாரணைகளை ஏற்க மாட்டோம் என ஜெனிவாவில் தெளிவாக கூறியது மட்டுமல்லாது சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமாகவே எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்று தர முடியும் என முழுமையாக நம்புகிறோம்.

தற்போது பதவியில் உள்ள தேசிய மக்கள் சக்தி என்கின்ற ஜேவிபி அரசாங்கம் அதன் பிரதமர் உள்ளூர் விசாரணை மூலம் தீர்வை பெற்று தரப் போகிறோம் என கூறுவது அவர்கள் தமது கதிரைகளை தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சியாகவே பார்க்கிறோம்.

பதவிகளைத் தக்க வைப்பதற்காக நாடகமாடும் அநுர அரசு : முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு | Anura Govt Drama Justice For The Missing Persons

இந்த அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்னர் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை உள்ளூர விசாரணை மூலம் பெற்று தருவோம் எனக் கூறினார்கள் நாங்கள் அதை ஏற்கவும் இல்லை அது சாத்தியப்படாது என்பதும் எமக்கு நன்கு தெரியும்.

ஏனெனில் நாம் ஐ.நா மனித உரிமை பேரவைக்கு செல்லும்போது சகோதர இனத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவரும் ஒரே குடும்பத்தில் நான்கு பேர் காணாமல் போனமைக்காக ஐ.நாவில் நீதி கேட்டு அடிக்கடி வருகை தருகிறார்.

இரண்டாவது மாடியில் இருந்து குதித்த 12 வயது சிறுவன் : வெளியான காரணம்

இரண்டாவது மாடியில் இருந்து குதித்த 12 வயது சிறுவன் : வெளியான காரணம்

காணாமல் ஆக்கப்பட்ட லலித் குகன்

இதையே ஏன் நான் கூறுகிறேன் என்றால் தற்போது ஆட்சியில் உள்ள ஜேவிபி அரசாங்கம் இலங்கையில் தமது தோழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு தீர்வை பெற்றுத்தர முடியாத காரணத்தால் அவர்கள் இன்றும் ஐநாவில் நீதி கோரிச் செல்கிறார்கள்.

பதவிகளைத் தக்க வைப்பதற்காக நாடகமாடும் அநுர அரசு : முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு | Anura Govt Drama Justice For The Missing Persons

ஜேவிபியின் செயற்பாட்டாளர்களான லலித், குகன், யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் இன்று வரை குற்றவாளிகள் யார் என அரச உயர் மட்டம் வரை தெரிந்த நிலையில் அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஜேவிபியாக முன்னர் செயற்பட்ட தமது தோழர்களுக்கான லலித் குகன் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு என் நீதியை பெற்றுக் கொடுக்கவில்லை என கேட்க விரும்புகிறேன்.

ஆகவே தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது தோழர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு கூட நீதியைப் பெற்றுத் தராத அரசாங்கமாக காணப்படுகின்ற நிலையில் தமது பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக கடந்த அரசாங்கங்களை போல பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றும் ஒரு நாடகத்தை மேற்கொண்டு வருகின்றனர்“ என அவர் மேலும் தெரிவித்தார்.

ரணிலுக்கு பிள்ளையானை பார்வையிட அனுமதி மறுப்பு : அரச தரப்பு அதிரடி

ரணிலுக்கு பிள்ளையானை பார்வையிட அனுமதி மறுப்பு : அரச தரப்பு அதிரடி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026