புதிய அரசியலமைப்பு தயாரிப்பு! முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் அழைப்பு
இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் ‘OneText’ நிறுவனம் தலைமையிலான அரசியலமைப்பு சீர்திருத்த உரையாடல் செயல்முறையின் சிறப்பு தொடக்க விழா நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வானது, கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற உள்ளது.
நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்ரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச, தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் இந்த வரலாற்று சிறப்புமிக்க தொடக்க நிகழ்விற்கு அழைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
முதன்மை நோக்கம்
கடந்த சில தசாப்தங்களாக இலங்கையின் சமூக-அரசியல் அரங்கில் தீவிர கவனத்தை ஈர்த்துள்ள அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்த விவாதத்தை நடைமுறை நிலைக்கு கொண்டு வருவதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

இந்த அறிஞர் கருத்துக் கணிப்பின் முக்கிய உரையை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்டத் துறைத் தலைவர் பேராசிரியர் தீபிகா உடகம நிகழ்த்துவார் என தெரிவிக்கப்டுகிறது.
இதேவேளை, ஜெயம்பதி விக்ரமரத்ன, குமார் வடிவேல் குருபரன், ரமேஷ் ராமசாமி, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் ஆகியோர் பிற உரைகளை நிகழ்த்த உள்ளனர்.
2003 ஆம் ஆண்டு முதல் நாட்டில் செயல்பட்டு வரும் ‘ஒன்டெக்ஸ்ட்’ நிறுவனம், கொள்கை வகுப்பிற்குத் தேவையான ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளை நடத்துவதற்கும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கும் ஒரு தனித்துவமான பங்களிப்பை வழங்கும் ஒரு நிறுவனமாகும்.
நாளை தொடங்கவுள்ள இந்த உரையாடல் திட்டத்தை பல்வேறு கட்டங்களில் பல்வேறு துறைகளில் தொடர்ந்து செயல்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
[PWWUNXY
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |