யாழில் இராணுவ ஆக்கிரமிப்பு நிலங்களில் அநுரவின் நடைபயணம்

Jaffna Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Sonnalum Kuttram
By Independent Writer Jan 16, 2026 10:30 AM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report

இன்று காலை பலாலி வடக்கின் அந்தோனிபுரம் வீதியில் வடக்கில் ஆக்கிரமித்து குடியிருக்கும் இராணுவத்தினர் சகிதம் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார் ஜனாதிபதி.

நேற்று யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி மக்களிடம் பேசும்போது எமது ஆட்சிக்கு யாழ்.மக்கள் தந்த நம்பிக்கையை மறக்க மாட்டேன் எனத் தெரிவித்தார்.

அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், “ஆட்சி மாற்றம் ஒன்றை நாட்டு மக்கள் விரும்பினார்கள் அதற்கு தமிழ் மக்களும் எம்மோடு கைகோர்த்து ஏற்படுத்திய அரசாங்கமே இன்று செயற்படுகிறது.

கடந்த கால அரசாங்கங்களில் மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் அவர்களைப் புறந்தள்ளி புதிய அரசாங்கத்தை எம்மிடம் கையளித்தார்கள் அதனை நாம் ஏற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். 

யாழ். மக்கள் புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு தமது பங்களிப்பை வழங்கினார்கள் அவர்களின் எதிர்பார்ப்பை நாம் சிதறடிக்க மாட்டோம் என இந்தப் பொங்கல் நாளில் கூறி வைக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டார். 

உண்மையில் வார்த்தைக்கு வார்த்தை இனவாதத்தை தோற்கடித்தோம் சமத்துவமான நாட்டை உருவாக்குவோம் என்று மார்த்தட்டிக்கொண்டிருக்கும் ஜனாதிபதிதான் ஆக்கிரமிக்கப்பட்ட மக்கள் நிலங்களின் மீது நடை பயின்றுகொண்டிருக்கின்றார்.

எளிமையான ஜனாதிபதி தோழர் என்று கொண்டாடும் உங்கள் ஜனாதிபதிக்கு எளிய மக்களின் நிலங்களை பிடித்து ஆக்கிரமித்து வைப்பது தவறென்று தெரியும்தானே?விடுவிப்பாரா?

வட்டக்கச்சி விவசாய அரச பண்ணையில் 415 ஏக்கர் நிலப்பரப்பு இன்னமும் இராணுவம் வசம் இருக்கின்றது.

வெள்ளாங்குளத்தில் 500 ஏக்கர் விவசாய பண்ணை இராணுவம் வசம் இருக்கின்றது.

தேராவிலில் 1,200 ஏக்கர் விவசாய பண்ணை இராணுவம் வசம் இருக்கின்றது.

முட்கொம்பனில் 100 ஏக்கர் தென்னம் தோட்டம் இராணுவம் வசம் இருக்கிறது.

முழங்காவிலில் 1,800 ஏக்கர் மரமுந்திரிகை தோட்டத்தில் பெரும்பகுதி இன்னமும் இராணுவம் வசம் இருக்கின்றது.

சாந்தபுரத்தில் 680 ஏக்கர் விவசாய பண்ணை இன்னமும் இராணுவம் வசம் இருக்கின்றது.

ஜெயபுரத்தில் 120 ஏக்கர் விவசாய பண்ணை இன்னமும் இராணுவம் வசம் இருக்கின்றது.

மலையாளபுரத்தில் 798 ஏக்கர் விவசாய பண்ணை இன்னமும் இராணுவம் வசம் இருக்கின்றது.

தேறாங்கண்டல் பல நூறு ஏக்கர் விவசாய பண்ணையும் இன்னமும் இராணுவம் ஆக்கிரமித்து இருக்கின்றது.

இது போதாதென்று யாழ்ப்பாணத்தில் 2,500 ஏக்கருக்கு மேற்பட்ட வளமான விவசாய நிலமும் இராணுவம் வசம் இருக்கின்றது.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி விவசாய பண்ணைகளை விருத்தி செய்தால் வடக்கு மகாணமே இலங்கை தீவின் விவசாய பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திற்கு கணிசமாக பங்களிக்க முடியும்.

குறிப்பாக இந்த பண்ணைகளில் சேமிப்பு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வடிகால் வெள்ளத்தடுப்பு அணைகளை மேம்படுத்தி உற்பத்தித்திறன் மேம்பாடு, பௌதிக வள மேம்பாடு, நிலத்தடி நீர் முகாமைத்துவம்,போன்ற மாற்றங்களை செய்து விவசாய சமூகத்தை வலுவடைய செய்ய முடியும். 

உள்ளூர் விதை உற்பத்தி , சேவைகால பயிற்சிகள் , விவசாய தொழில்நுட்ப விரிவாக்கம் போன்ற பல்வேறு விடயஙக்ளுக்கு மேற்படி பண்ணைகளை பயன்படுத்த முடியும்.

அதே போன்று சரியான உள்ளூடுகள் , இயற்கை உரம் போன்ற அடிப்படை விடயங்களை விவசாயிகளுக்கு உரிய நேரங்களில் இந்த பண்ணைகளை மக்கள் மயப்படுத்துவதன் ஊடக பெற்று கொடுக்க முடியும்.

மறுபுறம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் உள்ளன.

அதேபோல் மன்னாரில் 140,000 கால்நடைகள், வவுனியாவில் 130,000 கால்நடைகள் உள்ளன.

இவ்வாறு தேசிய பால் உற்பத்திக்கு முக்கிய பங்கு வகிக்கக்கூடிய வன்னி பெருநிலப்பரப்பில் உள்ள 370,000 கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களை இராணுவம், வன வள திணைக்களம் , வன ஜீவராசிகள் திணைக்களம் உட்பட ஒற்றையாட்சி கட்டமைப்புகள் ஆக்கிரமித்து இருக்கின்றன.

அதாவது இராணுவ ஆக்கிரமிப்புக்குள் வடக்கின் விவசாய மற்றும் விலங்கு வேளாண்மை சார்ந்த பொருளாதாரத்தை இன்னமும் முழுமையாக முடக்கி வைத்திருக்கின்றார்கள்.

இவ்வாறு முடக்கி வகிக்கப்பட்டிருக்கும் விவசாய பொருளாதாரத்திற்கு குறைந்த பட்ச தீர்வை பெற்று கொடுக்க தயாரில்லாத ஜேவிபி ஆட்சியாளர்கள் யாழ்ப்பாணத்தில் அநுரகுமார திசாநாயக்க தலைமையில் அரச பொது நிதியில் தைபொங்கல் கொண்டாடுகின்றார்கள்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025