சமாதான நீதவான் நியமனம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கையில் சமாதான நீதவான் நியமனத்தைப் பெறுவதற்கான கல்வித் தகைமையாக நிர்ணயிக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்தியடைய வேண்டும் என்ற நிபந்தனை க.பொ.த சாதாரண தரமாக குறைக்கப்பட்டுள்ளது.
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்சவினால் நவம்பர் 27ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியில், சமாதான நீதவான் நியமனத்திற்கான கல்வித் தகைமை மூன்று உயர்தரப் பாடங்களாக இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
அந்த விதியை திருத்தியமைத்து, கடந்த 13ஆம் திகதி நீதித்துறை அமைச்சர், மற்றுமொரு சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டார்.
சமூக சேவையைக் கருத்திற்கொண்டு
அதில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் இரண்டு அமர்வுகளுக்கு மேல் இல்லாது ஆறு பாடங்களில் C தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறிருந்தும், ஒருவருக்கு அந்தத் தகுதி இல்லாவிட்டாலும், ஒரு புகழ்பெற்ற மதத் தலைவரோ அல்லது ஒரு சங்கத் தலைவரோ அவர் சமூகத்திற்குச் செய்யும் முன்மாதிரியான சேவையைக் கருத்திற்கொண்டு சமாதான நீதியரசராக நியமிக்கத் தகுதியானவர் என்று பரிந்துரைத்தால், நீதி அமைச்சர் பரிசீலித்து அந்த நபரை சமாதான நீதிபதியாக நியமிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்