ஒரு மக்கள் பிரதிநிதி தெருச்சண்டியன் போல அடிபிடிப்படுவதுதான் நியாயமா ?

Sri Lanka Politician Sonnalum Kuttram Dr.Archuna Chavakachcheri
By Independent Writer Feb 14, 2025 12:46 AM GMT
Report

ஒரு சிலர் அங்குமிங்குமாக அந்த வைத்தியரின் பக்க நியாயம் என்று குடைபிடித்து ஓடித்திரிகிறார்கள் நாம் நியாயத்தை எங்கு பேசவேண்டும்.

நியாயம் என்பது எதனடிப்படையிலானது, என்னாதான் நியாயத்தை பேசிக்கொண்டாலும் ஒருவர் பொதுவெளியில் நடந்துகொள்கின்ற முறை என்று ஒன்று இருக்குமல்லவா?

என்னைப்போன்ற ஒரு சாமான்யன் இப்படி நடந்துகொள்ளவதே அருவருக்கத்தக்கது என்கின்ற போது ஒரு கூட்டம் தங்கள் ஆதர்சன நாயகனாக கொண்டாடும் ஒருவர் ஒரு மாவட்டத்தினுடைய நாடாளுமன்ற பிரதிநிதி பொதுவெளியில் நடந்துகொள்வதற்கு என்று ஒரு முறை இல்லையா ?

ஒரு மனிதனுக்கு கோபம் என்ற உணர்வு வழமையானதுதான் ஆனால் அதை பொதுவெளியில் கட்டுப்படுத்த முடியாத ஒருவர் ஒரு சமூகத்தை வழிநடத்தக்கூடிய ஒருவர்தானா? என்பதுதான் இங்கு எழும் கேள்வி.

கோபம் ரோசம் வெட்கம் இவையெல்லாம் எல்லா இடத்திலும் வெளிப்படுத்த முடியுமா? சில சந்தர்ப்பங்களை சரியாக கையாள முடியாத ஒரு ஆளுமையற்ற தன்மையால்தான் இப்படியான எதிர்வினைவுகளை ஆற்ற முடியும். தனிப்பட்ட மனிதனையும் சமூகத்தை வழி நடத்த தன்னை முன்னிறுத்தியவரையும் ஒன்றாக நோக்க முடியுமா?

அன்றைய நாள் வைத்தியர் அர்ச்சுனா செய்ததுதான் சரி அவருக்கான தனிப்பட்ட உணர்வின் பிரகாரம் அவர் அவ்வாறு நடந்து கொண்டார் என்பீர்களானால், ஏனைய அரசியல்வாதிகளை எப்படி விமர்சிக்க முடியும் ஒன்று மட்டும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டியது.

நியாயமான விமர்சனங்களுக்கு அப்பால் அவர் யாழ் தேர்தல் மாவட்டத்தை சேர்ந்த யாழ்ப்பாணம் (Jaffna) மற்றும் கிளிநொச்சி (Klinochchi) மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதி, அவரின் நடத்தை செயற்பாடு அந்த இரு மாவட்ட மக்களினையும் பிரதிபலிக்கும் ஒரு சூழல் நமக்கு சாதகமில்லை.

அவர்கள் நம்மை வேண்டுமென்றே வம்பிழுக்கிறார்கள் என்றால் அந்த இடத்தில் இருந்து தன்னை சுதாகரித்து நடந்திருக்க வேண்டியதுதான் ஒரு தலைமையின் பண்பு.

அதைவிடுத்து அடிபிடுப்பட்டு ஒரு காவாலியைப்போல நடந்து கொள்வதுதான் வீரம் என மார்தட்டுவதும் சாப்பிடும் போது வம்பிழுத்தால் கோவம் வரும் என்று ஆளாளுக்கு காவித்திரிந்து ஒரு பொதுமகனின் பொறுப்போடு நடந்திருக்க வேண்டிய நடத்தையை பொறுப்பற்று தெருச்சண்டியன் போல நடந்துகொண்டதை நியாயப்படுத்துவதும் ஒரு கீழ்த்தரமான மனநிலையே.

ஒரு சமூகத்தை வழிநடத்த தன்னை முன்னிறுத்த ஒருவன் தயாரானால் அவன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற வரையறை இருக்க வேண்டுமல்லவா அதைவிடுத்து என்னைப்போலவும் உங்களைப்போலவும் நடந்து கொள்ளக்கூட முடியாத ஒருவராக ஒரு கூட்டுப்பொறுப்பை சுமக்க வேண்டிய ஒருவரின் நடத்தை எழுந்தமானமாக இருந்துவிட முடியுமா?

எல்லாவற்றிற்கும் மேல் அன்று அவர்கள் கேலிபேசினார்கள் என்றால் அப்படியாக கேலிபேச வேண்டிய நிலமைக்கு அழைத்து வந்தது யார் ?

தங்கத்தை தேடி தன்னை பிரபல்யப்படுத்தினாரா அல்லது அறியாமையின் பால் கமராக்கண்களுக்கு முன் அப்படி நடந்துகொண்டாரா என்ற கேள்வியை கேட்டுப்பாருங்கள்.

மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தவேண்டியது அவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல. அவர் 16000 இற்கும் அதிகமான வாக்காளர்களின் பிரதிநிதி என்பதே அங்கு இழக்கப்பட்டது அல்லது மலினப்படுத்தப்பட்டுப்போனது என்பது அந்த மக்களின் கௌரவமுமே என்பதை நினைத்தாகவேண்டும்.

“ஆடம்பரவிடுதியில் அடிபிடிப்பட்ட யாழ் எம்பி “ இப்படி ஒரு தலைப்பு நாளை சிங்களப்பத்திரிகையிலோ ஆங்கிலப்பத்திரிகையிலோ வெளியானால் அது ஈழத்தமிழரின் வீரப்பிரதாபம் என்று மார்தட்டுவீர்களா?

நியாயங்கள் பேசப்படவேண்டும் ஆனால் அதற்கு ஒரு இடம் பொருள் ஏவல் இருக்கவேண்டாமா?

இலங்கை உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்

அத்தியாவசிய பொருட்களின் விலைக்குறைப்பு : வெளியான தகவல்

அத்தியாவசிய பொருட்களின் விலைக்குறைப்பு : வெளியான தகவல்

புடினை நம்ப வேண்டாம் : ஜெலென்ஸ்கி விடுத்த கடும் எச்சரிக்கை

புடினை நம்ப வேண்டாம் : ஜெலென்ஸ்கி விடுத்த கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017