ஒரு மக்கள் பிரதிநிதி தெருச்சண்டியன் போல அடிபிடிப்படுவதுதான் நியாயமா ?

Sri Lanka Politician Sonnalum Kuttram Dr.Archuna Chavakachcheri
By Independent Writer Feb 14, 2025 12:46 AM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report

ஒரு சிலர் அங்குமிங்குமாக அந்த வைத்தியரின் பக்க நியாயம் என்று குடைபிடித்து ஓடித்திரிகிறார்கள் நாம் நியாயத்தை எங்கு பேசவேண்டும்.

நியாயம் என்பது எதனடிப்படையிலானது, என்னாதான் நியாயத்தை பேசிக்கொண்டாலும் ஒருவர் பொதுவெளியில் நடந்துகொள்கின்ற முறை என்று ஒன்று இருக்குமல்லவா?

என்னைப்போன்ற ஒரு சாமான்யன் இப்படி நடந்துகொள்ளவதே அருவருக்கத்தக்கது என்கின்ற போது ஒரு கூட்டம் தங்கள் ஆதர்சன நாயகனாக கொண்டாடும் ஒருவர் ஒரு மாவட்டத்தினுடைய நாடாளுமன்ற பிரதிநிதி பொதுவெளியில் நடந்துகொள்வதற்கு என்று ஒரு முறை இல்லையா ?

ஒரு மனிதனுக்கு கோபம் என்ற உணர்வு வழமையானதுதான் ஆனால் அதை பொதுவெளியில் கட்டுப்படுத்த முடியாத ஒருவர் ஒரு சமூகத்தை வழிநடத்தக்கூடிய ஒருவர்தானா? என்பதுதான் இங்கு எழும் கேள்வி.

கோபம் ரோசம் வெட்கம் இவையெல்லாம் எல்லா இடத்திலும் வெளிப்படுத்த முடியுமா? சில சந்தர்ப்பங்களை சரியாக கையாள முடியாத ஒரு ஆளுமையற்ற தன்மையால்தான் இப்படியான எதிர்வினைவுகளை ஆற்ற முடியும். தனிப்பட்ட மனிதனையும் சமூகத்தை வழி நடத்த தன்னை முன்னிறுத்தியவரையும் ஒன்றாக நோக்க முடியுமா?

அன்றைய நாள் வைத்தியர் அர்ச்சுனா செய்ததுதான் சரி அவருக்கான தனிப்பட்ட உணர்வின் பிரகாரம் அவர் அவ்வாறு நடந்து கொண்டார் என்பீர்களானால், ஏனைய அரசியல்வாதிகளை எப்படி விமர்சிக்க முடியும் ஒன்று மட்டும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டியது.

நியாயமான விமர்சனங்களுக்கு அப்பால் அவர் யாழ் தேர்தல் மாவட்டத்தை சேர்ந்த யாழ்ப்பாணம் (Jaffna) மற்றும் கிளிநொச்சி (Klinochchi) மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதி, அவரின் நடத்தை செயற்பாடு அந்த இரு மாவட்ட மக்களினையும் பிரதிபலிக்கும் ஒரு சூழல் நமக்கு சாதகமில்லை.

அவர்கள் நம்மை வேண்டுமென்றே வம்பிழுக்கிறார்கள் என்றால் அந்த இடத்தில் இருந்து தன்னை சுதாகரித்து நடந்திருக்க வேண்டியதுதான் ஒரு தலைமையின் பண்பு.

அதைவிடுத்து அடிபிடுப்பட்டு ஒரு காவாலியைப்போல நடந்து கொள்வதுதான் வீரம் என மார்தட்டுவதும் சாப்பிடும் போது வம்பிழுத்தால் கோவம் வரும் என்று ஆளாளுக்கு காவித்திரிந்து ஒரு பொதுமகனின் பொறுப்போடு நடந்திருக்க வேண்டிய நடத்தையை பொறுப்பற்று தெருச்சண்டியன் போல நடந்துகொண்டதை நியாயப்படுத்துவதும் ஒரு கீழ்த்தரமான மனநிலையே.

ஒரு சமூகத்தை வழிநடத்த தன்னை முன்னிறுத்த ஒருவன் தயாரானால் அவன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற வரையறை இருக்க வேண்டுமல்லவா அதைவிடுத்து என்னைப்போலவும் உங்களைப்போலவும் நடந்து கொள்ளக்கூட முடியாத ஒருவராக ஒரு கூட்டுப்பொறுப்பை சுமக்க வேண்டிய ஒருவரின் நடத்தை எழுந்தமானமாக இருந்துவிட முடியுமா?

எல்லாவற்றிற்கும் மேல் அன்று அவர்கள் கேலிபேசினார்கள் என்றால் அப்படியாக கேலிபேச வேண்டிய நிலமைக்கு அழைத்து வந்தது யார் ?

தங்கத்தை தேடி தன்னை பிரபல்யப்படுத்தினாரா அல்லது அறியாமையின் பால் கமராக்கண்களுக்கு முன் அப்படி நடந்துகொண்டாரா என்ற கேள்வியை கேட்டுப்பாருங்கள்.

மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தவேண்டியது அவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல. அவர் 16000 இற்கும் அதிகமான வாக்காளர்களின் பிரதிநிதி என்பதே அங்கு இழக்கப்பட்டது அல்லது மலினப்படுத்தப்பட்டுப்போனது என்பது அந்த மக்களின் கௌரவமுமே என்பதை நினைத்தாகவேண்டும்.

“ஆடம்பரவிடுதியில் அடிபிடிப்பட்ட யாழ் எம்பி “ இப்படி ஒரு தலைப்பு நாளை சிங்களப்பத்திரிகையிலோ ஆங்கிலப்பத்திரிகையிலோ வெளியானால் அது ஈழத்தமிழரின் வீரப்பிரதாபம் என்று மார்தட்டுவீர்களா?

நியாயங்கள் பேசப்படவேண்டும் ஆனால் அதற்கு ஒரு இடம் பொருள் ஏவல் இருக்கவேண்டாமா?

இலங்கை உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்

அத்தியாவசிய பொருட்களின் விலைக்குறைப்பு : வெளியான தகவல்

அத்தியாவசிய பொருட்களின் விலைக்குறைப்பு : வெளியான தகவல்

புடினை நம்ப வேண்டாம் : ஜெலென்ஸ்கி விடுத்த கடும் எச்சரிக்கை

புடினை நம்ப வேண்டாம் : ஜெலென்ஸ்கி விடுத்த கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, நுணாவில், Toronto, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, Wuppertal, Germany, Toronto, Canada, Ottawa, Canada

13 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஏழாலை, Bad Harzburg, Germany

10 Nov, 2025
16ம் நாள் அந்திரெட்டியும்(சொர்க்கவாசல்), நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Bremen, Germany

10 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025