ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு உத்தரவு
சட்டமா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மே 9ஆம் திகதி கோட்டா கோ கம , மைனா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் சில பகுதிகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான பகுதிகளை ஆராய்ந்த பின்னரே முன்னாள் அமைச்சரைக் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது
அலரி மாளிகை மற்றும் காலிமுகத் திடல் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே சில அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு தற்போது ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.