மீளப் பெறப்பட்ட டயானா கமகேவின் பிடியாணை
புதிய இணைப்பு
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை கைது செய்து முன்னிலைப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுவதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டயனா கமகே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முன்னிலையானதைத் தொடர்ந்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணையை மீளப் பெற உத்தரவிட்டது.
முதலாம் இணைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை (Diana Gamage ) உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி (Thanuja Lakmali) இன்று (06.02.2025) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சிஐடியில் குற்றப்பத்திரிகை தாக்கல்
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியமை குறித்து இவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மீதான விசாரணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதன் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் செல்லுபடியாகும் விசா இல்லாமல் தங்கியிருப்பது மற்றும் குடிவரவு மற்றும் குடியேற்ற அதிகாரிகளுக்கு தவறான அறிக்கைகளை வழங்குவது உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (Cid) டயானா கமகேவுக்கு எதிராக 07 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |