தமிழர் பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர் வீட்டின் மீது தாக்குதல்
தமிழர் பகுதியில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி (SLB) ஆதரவாளர் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் கிளிநொச்சி (Kilinochchi) - அம்பாள் குளம் கிராமத்தில் உள்ள ஆதரவாளர் வீட்டின் மீதே நேற்று இரவு இடம்பெற்றுள்ளது..
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இறுதியாக நடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது குறித்த வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் வெற்றி பெற்றார்.
காவல் நிலையத்தில் முறைப்பாடு
இதன்போது, குறித்த வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர பிரச்சார நடவடிக்கைகள் ஈடுபட்ட ஆதரவாளர் ஒருவரின் வீட்டின் மீது நேற்று நள்ளிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக குறித்த வீட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவ்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
