நாமலுக்கு எதிராக சட்டமா அதிபர் வழங்கிய நடவடிக்கை! விசாரணையை தீவிரப்படுத்தபோகும் CID
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்தபோது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) ஆலோசனை வழங்கியுள்ளது.
சிறிலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவிக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்த வழக்கில் பிரதான சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள கபில சந்திரசேன பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சப் பணத்தில் ஒரு தொகை நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ். தேசிய கல்வியற் கல்லூரி மாணவியின் மன உளைச்சல் சம்பவம்: கல்வி நிறுவனங்களில் பொறுப்புணர்வு எங்கே...
சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை
இதன் காரணமாக நாமல் ராஜபக்சவை குறித்த வழக்கில் சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை எடுக்குமாறும் சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, குறித்த ஆலோசனை தொடர்பில் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்து(Motion), வழக்கை மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு விடயங்கள் அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி நாமல் ராஜபக்சவை அந்த வழக்கிலும் சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்தமை தொடர்பான பரிவர்த்தனையில், 2014–2015ஆம் ஆண்டுகளில் பல சந்தர்ப்பங்களில் மொத்தம் 100 இலட்சம் ரூபாய் இலஞ்சமாக பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், நாமல் ராஜபக்ச கடந்த 4ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த அவரை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |