2026-இல் மூன்றாம் உலகப்போர் மூளும்: பாபா வாங்காவின் திடுக்கிடும் கணிப்புகள் பலிக்கிறதா!
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற தீர்க்கதரிசி பாபா வாங்கா 2026-ஆம் ஆண்டு குறித்துக் கணித்த உலகப்போர் எச்சரிக்கையுடன் ஒத்துப்போவதாகக் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
பாபா வாங்கா 1996-ஆம் ஆண்டு மறைவதற்கு முன்னர் வெளியிட்ட கணிப்பின்படி, 2026-ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் ஒரு பெரும் உலகப்போர் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தற்போது ஈரான் ஏழு நாடுகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருவது இந்தக் கணிப்பை உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
வல்லரசு நாடுகள்
இந்த உலகப்போரில் வல்லரசு நாடுகள் நேரடியாக ஈடுபடும் என்றும் அதன் விளைவாகப் போர் பதற்றம் அனைத்துக் கண்டங்களுக்கும் பரவி பாரிய அழிவை ஏற்படுத்தும் என்றும் பாபா வாங்கா எச்சரித்துள்ளார்.

போர் காரணமாக உலக நாடுகளின் கரன்சி மதிப்பு வீழ்ச்சியடைதல், வங்கிகள் திவால் நிலைமைக்குத் தள்ளப்படுதல் மற்றும் கடுமையான பணவீக்கத்துடன் கூடிய நிதி நெருக்கடி ஏற்படும் என அவரது கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
பல நிலப்பகுதிகள்
மேலும், போரினால் ஐரோப்பாவின் பல நிலப்பகுதிகள் மக்கள் நடமாட்டமற்ற தரிசு நிலங்களாக மாறும் என்றும் ரசாயன அல்லது அணு ஆயுதங்களால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரின் இறுதியில் ரஷ்யா ஒரு பெரும் வல்லரசாக உருவெடுக்கும் என்றும், அந்நாட்டின் முக்கியத் தலைவர் ஒருவர் உலக அரசியலில் நீக்கமற நிறைந்த செல்வாக்கு மிக்கவராக மாறுவார் என்றும் பாபா வாங்கா குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே 9/11 இரட்டைக்கோபுரத் தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம் மற்றும் 2004 சுனாமி போன்ற பாபா வாங்காவின் முந்தைய கணிப்புகள் பலித்தது போலவே, தற்போது மார்ச் - ஏப்ரல் மாதங்களுக்கான உலகப்போர் எச்சரிக்கையும் உண்மையாகிவிடுமோ என்ற அச்சம் உலக மக்களிடையே பரவலாக எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |