அதிர வைக்கும் பாபா வங்காவின் கணிப்புகள்: அச்சத்தில் உலக மக்கள்
உலகின் பல தீர்க்கதரிசிகளில் ஒருவராக கருதப்படுபவர் பாபா வங்கா (Baba Vanga) வேற்றுகிரகவாசிகளுடன் மக்களுக்கு தொடர்பு ஏற்படும் அல்லது வேறொரு உலகை சேர்ந்த மக்களை சந்திக்கும் சூழல் உருவாகும் என கண்டித்துள்ளார்.
இதன் பிண்ணனியில் வேற்றுகிரகவாசிகள் மற்றும் விண்வெளிப் பயணத்தில் ஆர்வம் அதிகரித்து வருவதை காணக்கூடியதாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, சாதி போன்ற அமைப்புகள் முடிவுக்கு வரும் என்று பாபா வங்கா கணித்திருந்த நிலையில், இதனால் தோற்றம், நிறம், கலாச்சாரக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் மக்கள் வரும் ஆண்டுகளில் ஒருவரையொருவர் ஏற்றுக் கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவ முன்னேற்றம்
பாபா வங்கா கணித்தது போலவே பயோபிரிண்டிங், மீளுருவாக்கம் ஆகிய மருத்துவ முன்னேற்றம் மற்றும் மனித உடலுக்கான செயற்கை உறுப்புகள் கொண்டு வரப்படும் என்ற கணிப்பை உண்மையாகியுள்ளன.
அத்துடன் 2026 ஆம் ஆண்டுக்குள் செயற்கை உறுப்புகள் உற்பத்தி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பாவின் மக்கள்தொகை 2025 ஆம் ஆண்டுக்குள் குறைத்துவிடும் என்று பாபா வங்கா கணித்திருந்தார்.
சந்தைகள் சரிவு
அதன்படியே ஐரோப்பிய கண்டத்தின் பிறப்பு விகிதம் வேகமாக குறைந்துள்ளதுடன் இந்த கணிப்பு நிறைவேற அதிக வாய்ப்புள்ளதாக உள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோல் 2033 ஆம் ஆண்டில் கடல் மட்டத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்படும் என பாபா வங்கா கணித்திருந்த நிலையில் இது பலிக்கும் வகையில் காலநிலை மாற்றம் மற்றும் பனிப்பாறை உருகுதல் ஆகியவை நடந்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
இதனுடன் எதிர்காலத்தில் ஒரு கடுமையான பேரழிவு ஏற்படும் இதனால் சந்தைகள் சரிவுடன் தொடங்குவதுடன் உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது வேலையின்மைக்கு வழிவகுப்பதுடன் கடன், பணவீக்கம் மற்றும் நிலையற்ற பொருளாதார அமைப்புகள் பற்றிய உலகளாவிய கவலைகளை இந்த தீர்க்கதரிசனம் பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
