அடத்தியான முடி வளர்ச்சிக்கு காபி தூளை இப்படி ஒரு வாட்டி பயன்படுத்தி பாருங்க...!
Hair Growth
Beauty
Life Style
By Shalini Balachandran
அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.
இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
🛑 தேவையான பொருட்கள்
- காபி தூள்- 2 ஸ்பூன்
- முட்டை- 1

🛑 பயன்படுத்தும் முறை
- முதலில் ஒரு கிண்ணத்தில் காபி தூள் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- பின் அதை தலைமுடியின் உச்சந்தலை முதல் நுனி வரை நன்கு தடவி குறைந்தது ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
- அடுத்து மென்மையான ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
மற்றுமொரு வழிமுறை
🛑 தேவையான பொருட்கள்
- காபி தூள்- 2 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 1 கப்

🛑 பயன்படுத்தும் முறை
- பின் அதை வடிகட்டி, வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு குளிக்கும் முன் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து ஊற வைக்க வேண்டும்.
- பின்பு மென்மையான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
- இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடியின் வளர்ச்சியைத் தூண்டும் மற்றும் உச்சந்தலையை ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி