அவுஸ்திரேலியாவுக்கு செல்வதாய் படகில் ஏற்றிவிட்டு காட்டிக்கொடுக்கும் கடத்தல்காரர்கள்! அம்பலப்படுத்தப்பட்ட மோசடி
Sri Lanka Refugees
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Kiruththikan
காட்டிக்கொடுக்கும் கடத்தல்காரர்கள்
இளைஞர்களை சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு கூட்டிசெல்வதாக பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிவிட்டு கடத்தல்காரர்களே பாதுகாப்பு படையினருக்கு இடம்பெயர்வு குறித்த தகவல்களை வழங்குவதாக தெரியவந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் சட்டவிரோத இடப்பெயர்வாளர்கள் பற்றிய தகவல்கள் நாட்டில் அதிகமாக பதிவாகியுள்ளன.
ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி
எவ்வாறாயினும் இவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி அவர்களிடம் இருந்து பெருமளவான பணம் பறிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி ஒன்று இடம்பெறுவதாகவும் அதை பாதுகாப்பு படையினர் தற்போது அம்பலப்படுத்தியிருப்பதாகவும் சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2 மாத காலத்தில் மாத்திரம் 200க்கும் மேற்பட்ட சட்டவிரோத இடப்பெயர்வாளர்களை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

