கூகுளிடம் இருந்து தற்செயலாக வந்த 9 கோடி ரூபாய் பணம்! பொறியாளருக்கு அடித்த அதிர்ஷ்டம்
கூகுள்
அமெரிக்காவில் ஒரு பொறியாளரின் வங்கி கணக்கில் எதிர்பாராத விதமாக 9 கோடி ருபாய் பணத்தை கூகுள் நிறுவனம் செலுத்தியுள்ளது.
அதிலிருந்து ஒரு ரூபா கூட எடுக்காமல் எப்படி கூகுள் நிறுவனத்தை தொடர்பு கொள்வது என இணையத்தில் தேடிய ஆச்சரியமான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஒமாஹாவின் மெட்ரோ பகுதியில் உள்ள யுகா லேப்ஸ் நிறுவனத்தில் பொறியாளராக வேலைபார்க்கும் சாம் கரி (Sam Curry), கூகுளில் இருந்து எதிர்பாராத தொகையாக 250,000 அமெரிக்க டொலர் பணம் (இலங்கை ரூபாய் மதிப்பில் சுமார் 9 கோடி) தனது கணக்கில் வந்தது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கூகுள் நிறுவனத்தை அடைந்த டுவிட்டர் பதிவு
It's been a little over 3 weeks since Google randomly sent me $249,999 and I still haven't heard anything on the support ticket. Is there any way we could get in touch @Google?
— Sam Curry (@samwcyo) September 14, 2022
(it's OK if you don't want it back...) pic.twitter.com/t6f7v5erli
சாம் புதன்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில், "கூகுள் எனக்கு $249,999 ஐ தோராயமாக அனுப்பி 3 வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது, இன்னும் எதுவும் கேட்கவில்லை.
நான் கூகுளைத் தொடர்புகொள்ள ஏதேனும் வழி இருக்கிறதா? ( நீங்கள் அதைத் திரும்பப் பெற விரும்பவில்லை என்றால் சொல்லிவிடுங்கள் பரவாயில்லை...)" என்று வேடிக்கையாக ஒரு பதிவை செய்தார்.
இந்த விடயம் ஒருவழியாக கூகுள் நிறுவனத்தை அடைய, இது குறித்து கூகுள் செய்தித் தொடர்பாளர் பதிலளித்தார்.
மனிதப் பிழையின் விளைவாக எங்கள் குழு சமீபத்தில் தவறான நபருக்கு பணம் செலுத்தியது.
பணத்தை பெற்றவர் விரைவாக எங்களுக்கு தகவல் தெரிவித்ததை நாங்கள் பாராட்டுகிறோம், அதைச் சரிசெய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்று அவர் கூறினார்.
3 வாரங்களுக்கு மேலாக சாம் வங்கிக் கணக்கில் பணம் இருந்தது, ஆனால் அவர் எந்தத் தொகையையும் செலவழிக்காமல் கூகுள் நிறுவனம் பணத்தைத் திரும்பப் பெறுவதற்காகக் காத்திருந்தார்.
அதேபோல், கூகுள் தற்செயலாக பணத்தை செலுத்தியது என்ற அவரது யூகம் சரியாக இருந்தது.
பதில் அளித்த கூகுள் நிறுவனம்
கூகுள் நிறுவனம் பணத்தை திரும்பப் பெற விரும்புவதாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.
சாம் சில சமயங்களில் கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு தங்கள் மென்பொருளில் பிழைகளைக் (bugs) கண்டறிய உதவுவதாகவும் கூறினார்.
அவர் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "கூகுள் பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளவே பணத்தை அப்படியே வைத்திருந்தேன்.
நான் அதை எளிமையாக பயன்படுத்த எனக்கு எல்லா சுதந்திரமும் இருந்தது. கூகுள் எனக்கு சரியாக பதிலளிக்கவில்லை என்றால், வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக அந்த பணத்தை வேறொரு கணக்கில் மாற்ற வேண்டியிருக்கும்" என்று அவர் கூறினார்.
