ஈரானில் கருப்பு மழை: WHO விடுத்துள்ள எச்சரிக்கை
ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளில் எண்ணெய் கலந்த கருப்பு மழை (Black Rain) பெய்து வருவதால், பொதுமக்களுக்கு கடுமையான சுகாதார அபாயங்கள் ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் ஈரானின் எண்ணெய் சேமிப்பு கிடங்குகள், சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட எரிபொருள் வசதிகள் பலத்த சேதமடைந்ததால், பெரிய அளவில் தீப்பிழம்புகள் எழுந்திருந்தன.
இதனால் வெளியான நச்சு புகை (toxic smoke) வானத்தில் பரவி, மழையுடன் கலந்து கருப்பு மழையாக விழுந்துள்ளது. இந்த மழை அமில மழை (acidic rain) தன்மையுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆபத்து மிக அதிகம்
WHO பேச்சாளர் கிறிஸ்டியன் லிண்ட்மேயர் கூறுகையில், “எண்ணெய் எரிந்ததால் வெளியான நச்சு ஹைட்ரோகார்பன்கள், கந்தக ஒக்ஸைடுகள், நைட்ரஜன் சேர்மங்கள் ஆகியவை காற்றில் கலந்துள்ளன.

இந்த கருப்பு மழை மற்றும் அமில மழை மக்களுக்கு, குறிப்பாக சுவாச மண்டலத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்” என்றார். குழந்தைகள், முதியோர், முன்பிருந்து சுவாச நோய் உள்ளவர்களுக்கு ஆபத்து மிக அதிகம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஈரான் அரசு பொதுமக்களை வீட்டுக்குள் இருக்குமாறு, வெளியே செல்லாமல் இருக்குமாறு, மழைநீரைத் தொடாமல் இருக்குமாறு, அறிவுறுத்தியுள்ளன. மழை பெய்த பகுதிகளில் குளிருட்டிகளை வீட்டினுள் பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |