ஜப்பான் பிரதமரை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல் - மயிரிழையில் தப்பினார்
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மேடையில் பேசிக்கொண்டிருந்தவேளை குண்டு வெடித்ததையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வகாயாமா மாகாணத்தில் உள்ள சைகாசாகி மீன்பிடி துறைமுகத்தில் இன்று (15) இடம்பெற்ற தாக்குதலில் பிரதமருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.
குண்டு வெடித்ததால் ஏற்பட்டபுகை மூட்டம்
குண்டு வெடித்ததால் அப்பகுதியில் புகை மூட்டம் சூழ்ந்தது. இச்சம்பவத்தில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா பத்திரமாக மீட்கப்பட்டார். இதையடுத்து பிரதமரை பத்திரமாக பாதுகாப்பு வீரர்கள் வெளியேற்றினர்.
சந்தேக நபர் கைது
சம்பவம் தொடர்பில் இருபது முதல் முப்பத்தேழு வயதுக்கு இடைப்பட்ட நபர் ஒருவரை ஜப்பானிய பாதுகாப்புப் படையினர் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததையடுத்து தற்போது பிரதமர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
