வசந்த கரன்னாகொடவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் வசந்த கரன்னாகொடவுக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ச தேவையான தகுதிகள் இன்றி இலங்கை கடற்படையில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய அழைக்கப்பட்டதை அடுத்து, அவர் CIABOC-ஆல் இன்று கைது செய்யப்பட்டார்.
CIABOC-இன் கூற்றுப்படி, இலங்கை கடற்படையின் நிர்வாகப் பிரிவிற்கு 2006-ஆம் ஆண்டில் மாணவர் அதிகாரிகளை நியமித்தது தொடர்பான விசாரணையுடன் இந்தக் கைது நடவடிக்கை தொடர்புடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்யாமல் நபர்கள் இதில் நியமிக்கப்பட்டதாகவும், ஐக்கிய இராச்சியத்தில் உள்ள அரச கடற்படைக் கல்லூரியில் பயிற்சிக்கு வசதி செய்வதற்காக நிறுவப்பட்ட நடைமுறைகளுக்குப் புறம்பாக அரச நிதிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரணையில் அவர் CIABOC-ஆல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் வசந்த கரன்னாகொட , இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) இன்று கைது செய்யப்பட்டார்.
இலங்கைக் கடற்படையில் நிறைவேற்று அதிகாரியாக யோஷித ராஜபக்சவின் நியமனம் மற்றும் அதனைத் தொடர்ந்து பிரித்தானிய அரச கடற்படைக் கல்லூரியில் அவருக்கு அளிக்கப்பட்ட பயிற்சி ஆகியவை தொடர்பான விசாரணைக்காக கரன்னகோடா முன்னதாக CIABOC-ஆல் அழைக்கப்பட்டிருந்தார்.
உடல்நலக்குறைவைக் காரணம் காட்டி, அவர் இதற்கு முந்தைய ஒரு சந்தர்ப்பத்தில் ஆணையத்தின் முன் முன்னிவையாகவில்லை.
யோஷித ராஜபக்ச
இந்நிலையில் யோஷித ராஜபக்சவும் இந்த வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

விசாரணைத் தரவுகளின்படி, யோஷித 2006 டிசம்பரில் உரிய கடற்படை மாணவர் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
இருப்பினும், அதற்கு முன்பாக, 2006 செப்டம்பரில், முன்னாள் கடற்படைத் தளபதி, உரிய பிரித்தானிய கடற்படைப் பயிற்சிக்குத் தன்னை அனுப்புமாறு அதிகாரப்பூர்வமாகக் கோரியிருந்தது தெரியவந்துள்ளது.
மேலும், அவர் தேர்வு செய்யப்பட்ட இந்த மாணவர் பயிற்சிக்கு விண்ணப்பங்களை அழைக்கும் பத்திரிகை விளம்பரங்கள் 2006 ஒக்டோபரில் வெளியிடப்பட்டதை விசாரணைகள் மேலும் உறுதிப்படுத்தியுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்