இலங்கையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் அற்புத மருந்து?
corona
sri lanka
people
By Shalini
உலகின் பல பகுதிகளிலும் கொரோனாவை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் (Molnupiravir) என்ற அற்புத மருந்தை இலங்கையிலும் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறதாக மருந்தாக்கல், விநியோகம் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன (Sanna Jayasumana) தெரிவித்தார்.
இது தொடர்பான தேவையான பரிந்துரைகளை வழங்குமாறு அவர் சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரலிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மார்க் என்ற மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த மருந்தின் பயன்பாடு குறித்து உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் கவனம் செலுத்துகின்றன.
இதேவேளை, இந்த மருந்து தற்போது பரிசோதிக்கப்படுகிறது, இதன் ஆரம்ப முடிவுகள் வெற்றிகரமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.