பொதுமக்களுக்கு ஒரு சட்டம் பெளத்த துறவிக்கு ஒரு சட்டமா : கேள்வியெழுப்பும் பொதுமக்கள்

Tamils Trincomalee Buddhism
By Sathangani Oct 09, 2024 11:16 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

திருகோணமலையில் (Trincomalee) உழவுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உழவு இயந்திரத்தை பௌத்த பிக்கு ஒருவர் தடுத்து நிறுத்தியமை குறித்து  பொதுமக்களுக்கு ஒரு சட்டம் பெளத்த துறவிக்கு ஒரு சட்டமா என கேள்வியெழுப்பியுள்ளனர்.

திருகோணமலை - குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (04) குறித்த சம்பவம் இடம்பெற்றமையால் அப்பகுதியில் பதற்ற நிலை தோன்றியது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மூவின ஒன்றிணைந்த விவசாய அமைப்புக்கள் திருகோணமலை ஊடக இல்லத்தில் இன்று (09) தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

தமிழர் தலைநகரில் பௌத்த பிக்குவின் அடாவடி: இன்னலுறும் தமிழ் மக்கள்

தமிழர் தலைநகரில் பௌத்த பிக்குவின் அடாவடி: இன்னலுறும் தமிழ் மக்கள்

உழவுப்பணியை தடுத்து நிறுத்தியவர் 

இங்கு கருத்து வெளியிட்ட அவர்கள், “திரியாய் விவசாய சம்மேளனத்திற்குட்பட்ட வளத்தாமலைப் பகுதியில் உள்ள வயல் காணியில் பெரும்போக நெற்செய்கைக்காக ஆயத்த நடவடிக்கையாக உழவுப் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

பொதுமக்களுக்கு ஒரு சட்டம் பெளத்த துறவிக்கு ஒரு சட்டமா : கேள்வியெழுப்பும் பொதுமக்கள் | Buddhist Monk Cultivates People S Lands In Trinco

இதன்போது அங்கு வருகைதந்த பெளத்த துறவி ஒருவரால் குறித்த காணியானது தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான காணி என்றும் அங்கு சட்டவிரோத முறையில் பொதுமக்கள் விவசாயத்தில் ஈடுபடுவதாக அவர் குழப்பம் விழைவித்திருந்தார்.

சப்தநாக விகாரையின் விகாராதிபதி உழவுப்பணியை தடுத்து நிறுத்தியதாகவும், தொல்லியலுக்குரிய பகுதியில் குறித்த பிக்கு உழவு செய்து வருவதாகவும் குச்சவெளி காவல் நிலையத்தில் புல்மோட்டையைச் சேர்ந்த புகாரி என்பவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து புத்த பிக்குவினால் மேற்கொள்ளப்பட்டுவந்த உழவுப்பணியும் நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொது மக்கள் இருவர் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

பலமிழக்கும் தமிழரசுக் கட்சி: விலகும் மற்றுமொரு முக்கிய உறுப்பினர்

பலமிழக்கும் தமிழரசுக் கட்சி: விலகும் மற்றுமொரு முக்கிய உறுப்பினர்


கேள்வியெழுப்பும் பொதுமக்கள்

யுத்தத்தால் இடம்பெயர்ந்து பின்னர் மீள குடியமர்ந்துள்ள தமிழ் மக்கள் தங்கள் காணியில் விவசாயம் மேற்கொள்ள வரும்போது பூஜாபூமி எனக்கூறி விடுகின்றார்கள் இல்லை.

பொதுமக்களுக்கு ஒரு சட்டம் பெளத்த துறவிக்கு ஒரு சட்டமா : கேள்வியெழுப்பும் பொதுமக்கள் | Buddhist Monk Cultivates People S Lands In Trinco

1985ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து வளத்தாமலைப் பகுதியில் உள்ள காணிகளில் திரியாய் மக்கள் காலாகாலமாக விவசாயம் மேற்கொண்டு வந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட வன்செயலின் காரணமாக திரியாய் கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்திருந்தனர்.

2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த மக்கள் மீள குடியமர்த்தப்பட்ட நிலையிலும் தங்கள் காணிகளில் விவசாயம் மேற்கொள்வதற்கு வனவள பாதுகாப்பு திணைக்களம் உட்பட அரச திணைக்களங்கள் அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு அரிசிமலை விகாரை விகாராதிபதியின் பெயரில் குச்சவெளி கமநல சேவைகள் திணைக்களத்தின்கீழ் 82 ஏக்கர் காணிகள் பதிவு செய்யப்பட்டு இன்றுவரை நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பொதுமக்களுக்கு ஒரு சட்டம் பெளத்த துறவிக்கு ஒரு சட்டமா?“ என கேள்வி எழுப்பினர்.

சங்குச் சின்னத்தில் களமிறங்கும் கூட்டணி வேட்புமனுத் தாக்கல்

சங்குச் சின்னத்தில் களமிறங்கும் கூட்டணி வேட்புமனுத் தாக்கல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023