தமிழர் தலைநகரில் பௌத்த பிக்குவின் அடாவடி: இன்னலுறும் தமிழ் மக்கள்

Sri Lankan Tamils Trincomalee Sri Lankan Peoples
By Dilakshan Oct 05, 2024 06:23 PM GMT
Report

திருகோணமலை (Trinco) - குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மக்களை விவசாயம் செய்ய விடாமல் பௌத்த பிக்கு ஒருவர் அடாவடித்தனமாக செயற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

திரியாய் விவசாய சம்மேளனத்திற்குட்பட்ட வளத்தாமலைப் பகுதியில் உள்ள தனது காணியில் மானாவரி பெரும்போக நெற்செய்கைக்காக உழவுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு வருகைதந்த சப்தநாக விகாரையின் விகாராதிபதி தடுத்து நிறுத்தியதாக குச்சவெளி காவல் நிலையத்தில் புல்மோட்டையைச் சேர்ந்த புகாரி என்பவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

புல்மோட்டையைச் சேர்ந்த புகாரி என்பவர் வளத்தாமலைப்பகுதியில் உள்ள தனக்கும் தனது தாய்க்கு சொந்தமான விவசாய காணியில் கடந்த 2020 ஆண்டு காலப்பகுதியில் இருந்து மானாவரி நெற்செய்கை மேற்கொண்டு வந்துள்ளார்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் முக்கிய சாட்சி மீது தாக்குதல்!! புதிய ஆட்சியில் அதிர்ச்சிச் சம்பவம்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் முக்கிய சாட்சி மீது தாக்குதல்!! புதிய ஆட்சியில் அதிர்ச்சிச் சம்பவம்


சிங்களவர்களுக்கு குத்தகை

இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு காலத்தில் இருந்து குறித்த பௌத்த பிக்கு விவசாயம் செய்ய விடாமல் தடுத்ததாகவும் இதற்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவு பெற்று விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும் மற்றைய நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட காணிக்குள் கற்களைப் போட்டு விவசாயம் செய்ய விடாமல் தடுத்து வருவதாகவும் புகாரி தெரிவித்துள்ளார்.

தமிழர் தலைநகரில் பௌத்த பிக்குவின் அடாவடி: இன்னலுறும் தமிழ் மக்கள் | Buddhist Monks In Trincomalee Disturb The Farmers

அத்துடன், வளத்தாமலைப் பகுதியில் இருக்கின்ற திரியாயைச் சேர்ந்த தமிழ் மக்களுடைய உறுதி மற்றும் அனுமதிப்பத்திர காணிகளை பௌத்த பிக்கு வலுக்கட்டாயமாக பிடித்து பதவி ஸ்ரீபுர பகுதியில் இருக்கின்ற சிங்களவர்களுக்கு குத்தகைக்கு வழங்கி வருவதாகவும் இதனால் தமிழ் மக்கள் விவசாயம் மேற்கொள்வதற்கு காணி இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதேவேளை, யுத்தத்தால் இடம்பெயர்ந்து பின்னர் மீள குடியமர்ந்துள்ள தமிழ் மக்கள் தங்கள் காணியில் விவசாயம் மேற்கொள்ள வரும்போது பூஜா பூமி எனக்கூறி விடுகின்றார்கள் எனவும் முறைப்பாட்டாளர் புகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ். மத்திய கல்லூரியின் பெற்றோர்களினால் ஜனாதிபதிக்கு கோரிக்கை மனு

யாழ். மத்திய கல்லூரியின் பெற்றோர்களினால் ஜனாதிபதிக்கு கோரிக்கை மனு


பிரித்தானியா காலத்து உறுதி

1985 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து ஆத்திக்காடு வளத்தாமலைப் பகுதியில் உள்ள காணிகளில் திரியாய் மக்கள் காலாகாலமாக விவசாயம் மேற்கொண்டு வந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட வன்செயலின் காரணமாக திரியாய் கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்திருந்தனர்.


2002 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த மக்கள் மீள குடியமர்த்தகப்பட்ட நிலையிலும் தங்கள் காணிகளில் விவசாயம் மேற்கொள்வதற்கு வனவள பாதுகாப்பு திணைக்களம் உட்பட அரச திணைக்களங்கள் அனுமதி வழங்காத நிலையில் 2020 ஆம் ஆண்டு அரிசிமலை விகாரை விகாராதிபதியின் பெயரில் குச்சவெளி கமநல சேவைகள் திணைக்களத்தின்கீழ் 82 ஏக்கர் காணிகள் பதிவு செய்யப்பட்டு இன்றுவரை நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், குறித்த காணிகளுக்கான பிரித்தானியா காலத்து உறுதியும், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அத்தாட்சிப் பத்திரங்கள் உட்பட பல ஆவணங்கள் இருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அநுரவிற்கு ஆதரவு கரம் நீட்டும் தமிழ் அரசியல் கட்சி தலைமைகள் - எழுந்துள்ள குற்றச்சாட்டு

அநுரவிற்கு ஆதரவு கரம் நீட்டும் தமிழ் அரசியல் கட்சி தலைமைகள் - எழுந்துள்ள குற்றச்சாட்டு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, ஈச்சமோட்டை

07 Mar, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025