நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது பேருந்து கட்டணம்
இன்று (23) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்துக் கட்டணங்களை 12.19% உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
அதன்படி, தற்போது ரூ. 27 ஆக உள்ள குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் ரூ. 30 ஆக உயரும். எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், பேருந்துக் கட்டணங்களை 15% உயர்த்த வேண்டும் என பேருந்து சங்கங்கள் நேற்று அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தன.
பேருந்துக் கட்டணங்களில் 10%க்கும் அதிகமான தாக்கம்
இருப்பினும், எரிபொருள் விலை உயர்வால் பேருந்துக் கட்டணங்களில் 10%க்கும் அதிகமான தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான ஒரு முன்மொழிவு இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தேசியப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சில தனியார் பேருந்து உரிமையாளர்கள் நேற்று இரவு முதல் பேருந்துகளை இயக்குவதை நிறுத்தியிருந்தனர்.
குறைந்தளவு பேருந்துகள் சேவையில்
அதன்படி, இன்று காலை குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளே இயக்கப்பட்டன. பேருந்துகள் சரியாக இயங்காததால், பாடசாலை மாணவர்கள் உட்பட பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

இன்று சாதாரணமாக இயங்கிய சில பேருந்துகளிலும் கடும் நெரிசல் காணப்பட்டது. இதன்படி பேருந்து கட்டணங்கள் நள்ளிரவு முதல் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
திருத்தப்பட்ட பேருந்துக் கட்டணங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |