மூன்று வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து : பலர் வைத்தியசாலையில் அனுமதி
Sri Lanka Police
Badulla
Sri Lanka Police Investigation
By Sumithiran
பண்டாரவளையில் இருந்து வெல்லவாய நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று, பதுளை-பண்டாரவளை பிரதான வீதியில் டோவா பகுதியில் இன்று (23) பிற்பகல் முச்சக்கர வண்டி மற்றும் வான் மீது மோதியதில், ஏழு பேர் காயமடைந்து பண்டாரவளையில் உள்ள பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக எல்ல காவல்துறையினர் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் நான்கு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் அடங்குவதாகவும், அவர்களில் தனியார் பேருந்தின் நடத்துனர் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஆகியோர் அடங்குவர் என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
தனியார் பேருந்தில் பயணம் செய்தவர்கள்
காயமடைந்த நான்கு பெண்களும் மற்ற ஆணும் தனியார் பேருந்தில் பயணம் செய்தவர்கள் என்று காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 2 மணி நேரம் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்