முன்னாள் போராளிகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு
2009 ம் ஆண்டு யுத்தம் மௌனித்த பின் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் தொடர் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் என்னவென்றால் போராளிகள் இன்னும் முழுமையாக அரசியல் மயப்படவில்லை என்பதே. அதனால் முன்னாள் போராளிகள் அரசியல் மயப்பட வேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் அழைப்பு விடுவித்துள்ளார்
இன்றைய தினம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாட்டில் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவருமான வேந்தன் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்
12000ற்கு மேற்பட்ட புனர்வாழ்வு பெற்ற போராளிகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அங்கத்துவம் வகிக்கும் அணைத்து இயக்கங்களும் அரசியல் மயப்படுத்தப்பட்ட பின்னரே அவர்களுக்கான அடக்குமுறைகள் மற்றும் அவர்கள் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சனைகள் ஓரளவு முடிவுக்கு வந்துள்ளது

அதேபோல் 12000ற்கு மேற்பட்ட புனர்வாழ்வு பெற்ற போராளிகள் வடக்கு கிழக்கு முழுவதும் காணப்படுகின்றனர் ஆனாலும் அவர்கள் இன்னும் பல அரசியல் அடக்கு முறைகள் மற்றும் புலனாய்வு துறையினரின் பின் தொடரும் தன்மைகள் தொடர்ந்து கொண்டுள்ளது
இதனை நிறைவுக்கு கொண்டு வர அனைவரும் ஒன்றிணைந்து தமக்கான ஒரு அரசியல் பிரதிநிதித்துவத்தை உருவாக்க வேண்டும் அதற்கான சந்தர்ப்பத்தை முழுமையாக தந்துள்ளது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியே ஆகும்
ஓரணியில் திரண்டு பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்
பல கட்சிகளில் பல முன்னாள் போராளிகள் இருந்தாலும் அவர்கள் இன்னொருவருக்கான அரசியல் அங்கீகாரத்திற்காக செயற்பட்டு வருகின்றனர் இந்த நிகழ் காலத்தில் ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலைப்புலிகளின் ஒரே தெரிவாகவே காணப்படுகிறது

அதனால் அனைத்து புனர்வாழ்வு பெற்ற போராளிகளும் ஓரணியில் திரண்டு தமக்கான பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் அழைப்பு விடுத்துள்ளார்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |