கனடா வாழ் யாழ்ப்பாண இளைஞனுக்கு நடந்த அவலம்!
By pavan
கனடாவில் நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
ஐந்து வருடங்களுக்கு முன்னர் புலம் பெயர்ந்து கனடா சென்ற இளைஞர் நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற சமயம் குறித்த துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவத்தில் வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு பரிதாபாக உயிரிழந்தவராவார்.
இச் சம்பவம் தொடர்பாக அந்நாட்டு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி