பிரதமருக்கும் ஆளுநருக்கும் இடையில் முறுகலா!! மத்திய வங்கி வெளிப்படுத்திய உண்மை
பிரதமருக்கும் தனக்குமிடையில் கருத்துவேறுபாடு காணப்படுவதாக வெளியாகும் தகவல்களை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நிராகரிப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவியிருந்தன.
மத்திய வங்கியின் டுவீட்
இது குறித்து இலங்கை மத்திய வாங்கி தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளது.
குறித்த பதிவில், “ஆளுநருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முரண்பாடு இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் சில செய்திகளை இலங்கை மத்திய வங்கி அறிந்துள்ளது.
மத்திய வங்கி ஆளுநர் இத்தகைய கூற்றுகளை கடுமையாக நிராகரிப்பதோடு, பிரதமரும் ஆளுநரும் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு தொடர்ந்தும் நல்லிணக்கத்துடன் செயற்படுகின்றனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
(2/2) The Governor vehemently rejects such assertions and reiterates that the cordial relationship between him and the Hon. Prime Minister continues in every respect to restore the Sri Lankan economy.
— CBSL (@CBSL) June 7, 2022