செம்மணியில் புதைக்கப்பட்ட தமிழர்கள் - வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
கிருசாந்தி காணாமல் ஆக்கப்பட்டது 1996.09.07. அவரது கொலை தொடர்பில் கைதான கொலையாளி செம்மணிப்படுகொலை தொடர்பில் வாக்குமூலம் அளித்தது 1998.07.03 ஆகும். அதுவே செம்மணிப்படுகொலையை அம்பலப்படுத்தியது.
இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் இனப்படுகொலை செய்யப்படவில்லை. அதற்கு முன்பாகவே பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் ஈழத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
அந்த வகையில் நீண்டகாலமாக இலங்கை இராணுவத்தின் தண்டனை விலக்கின் சின்னமாகுமாக கருதப்பட்ட செம்மணி சிந்துபதி புதைகுழியின் மர்மங்கள் தற்போது வெளியாகியுள்ளமை சர்வதேசத்தின் பார்வையை இலங்கைமீது திருப்பியுள்ளது.
செம்மணிப் பகுதி, 1990களில் இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் ஆழமாகப் பிணைந்துள்ளது.
இந்தநிலையில் செம்மணி மனிதப்புதைக்குழி தொடர்பில் உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் பொறுப்பு வாய்ந்த ஊடகமாக லங்காசிறி செம்மணி புதைக்குழியை நோக்கி புறப்பட்டது.
உண்மைகளை தேடி செம்மணிக்கு சென்ற எமக்கு பல அதிர்ச்சியூட்டு விடயங்கள் கிடைக்கப்பெற்றன.
செம்மணியில் மனித எலும்புக்கூடுகளை முதலில் கண்ட நபர் நேரடி சாட்சியாக எம்முடன் அவரது அனுபவங்களை எம்முடன் பகிர்ந்துக்கொண்டார்.
இது தொடர்பான முழுடையான விடயங்களை கீழ் உள்ள காணொளியில் காண்க....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
