14 வயது மாணவிக்கு ஆபாசமான படங்களை அனுப்பிய ஆசிரியர் கைது!
Sri Lanka Police
Sri Lankan Schools
By pavan
தம்புத்தேகம என்ற பிரதேசத்தில் உள்ள 14 வயதுடைய பாடசாலை மாணவிக்கு வட்ஸ்அப் செயலி ஊடாக ஆபாசமான படங்கள் அனுப்பிய அதே பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவம் நேற்று முன்தினம் (30) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகத்தின் பேரில் குறித்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
தம்புத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூளும், குறித்த ஆசிரியரை நேற்று (31) தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது
