அயல்வீட்டுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - சந்தேக நபர் விளக்கமறியலில்...
Child Abuse
By Vanan
யாழ்ப்பாணத்தில் 6 வயதுச் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடும்பத்தலைவரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இளவாலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பிரான்பற்று பகுதியில் இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
சம்பவத்தையடுத்து சிறுமிக்கு ஏற்பட்ட மன உளைச்சலை அடுத்து யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.
சிறுமி வழங்கிய தகவலின் அடிப்படையில், அவரது தந்தையின் நண்பரான அயல் வீட்டைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பத்தலைவர் ஒருவர் இளவாலை கால்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் நேற்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். இதன்போது, சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்