இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகள்: சீன தூதரகம் விசேட அறிவித்தல்
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் நெருக்கடிகளிலிருந்து இலங்கை மக்கள் மீள்வதற்காக அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க சீனா தீர்மானித்துள்ளது.
இலங்கை மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில் இந்த உதவி வழங்கப்படுவதாகவும், வழங்கப்படும் உதவிகள் குறித்த தகவல்கள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த உதவிகளை சீன வெளிவிவகார அமைச்சும் சீன சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனமும் ஒன்றிணைந்து வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
இலங்கைக்கான சீன தூதரகம் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இதனை அறிவித்துள்ளது.
#Chinese Foreign Ministry @MFA_China & Int'l Development Cooperation Agency @cidcaofficial announced that #China will provide emergency humanitarian assistance to #SriLanka to help its people overcome current difficulties.
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) April 20, 2022
Details of the aid will be released in coming days. pic.twitter.com/RmGI2FAygP
