கொழும்பிலுள்ள சீன தூதரகம் வெளியிட்ட தகவல்
மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு
மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பல்வேறு நாடுகளிடமும் உதவுமாறு இலங்கை கோரிக்கை விடுத்திருந்தது.
அந்த வகையில் இந்தியா, பங்ளாதேஷ் மற்றும் சிலநாடுகள் இந்த அவசர உதவிகளை வழங்கி வருகின்றன.
இதன்படி சீனா வழங்கவுள்ள மருந்துத் தொகுதி ஒன்று நாளை இலங்கைக்கு வரவுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதன் மதிப்பு சுமார் 500 மில்லியன் யுவான் என சீன தூதரகம் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.
சீனா வழங்கவுள்ள உதவி
இந்த மருந்துகள் 2 கட்டங்களாக இலங்கையை வந்தடையவுள்ளன. அதன் முதல் தொகுதியில் 10 மில்லியன் யுவான் மதிப்புள்ள Enoxaparin Sodium ஊசிகள் 256,320 உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாவது மருந்துத் தொகுதி இம்மாத நடுப்பகுதியில் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Media release: First Batch of China’s Grant Medicines Will Arrive on 3rd June
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) June 2, 2022
512,640 syringes of life-saving Enoxaparin Sodium Injection worth of 10 million RMB, the first batch of #China’s 500 mln RMB grant to #SriLankan people will be delivered via two consignments soon.
1/ pic.twitter.com/uOU2Wjcmo1
