அரச ஊழியர்களுக்கான சுற்றுநிருபம் வெளியானது! சேவைக்கு அழைப்பது தொடர்பான தகவல்
Socio Economic Development Trust
Government Employee
Sri Lanka Fuel Crisis
By Kanna
அரச நிறுவனங்களில் ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துதல் தொடர்பான அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சுற்றறிக்கையில் அத்தியாவசியமான ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்கும் அதிகாரத்தை திணைக்களத் தலைவர்களுக்கு வழங்குவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாகவும் அத்தியாவசிய அரச ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு அழைப்பதற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.