வீதியில் காவல்துறையினர் இடையில் மோதல்:அதிகாரிகள் கைது
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வரக்காபொல பிரதேசத்தில் காவல்துறை அதிகாரிகள் இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக இரண்டு காவல்துறை பரிசோதகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடந்துள்ளது. ஒரு காவல்துறை தரப்பினர் 30 ஆம் திகதி இரவு இறம்புக்கனை பிரதேசத்தில் நடந்த திருமண வைபவத்தில் கலந்துக்கொண்டு விட்டு திரும்பும் வழியில் வாகன போக்குவரத்து சம்பந்தமாக மற்றுமொரு பொலிஸ் தரப்புடன் தகராறை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர்.
சம்பவம் நடந்த போது இரண்டு தரப்பினரும் சாதாரண உடையில் இருந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எது எப்படி இருந்த போதிலும் இலங்கை காவல்துறைத் திணைக்களத்தில் பணியாற்றும் காவல்துறையினருக்கு மத்தியில் ஒழுக்க கட்டுப்பாடு சீர்குலைந்துள்ளதை காட்டும் இப்படியான பல சம்பவங்கள் கடந்த காலத்தில் நடந்துள்ளதாக காவல்துறை திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.