தலைநகரில் தீடீரென பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு..! குவிக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினர்
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Kiruththikan
பாதுகாப்பு
கொழும்பில் இன்றைய தினம் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் ஏ.எஸ்.ஜே. சந்திரகுமார இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் முன்னெடுக்கப்பட உள்ள போராட்டத்தின் போது பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடுமையான சட்ட நடவடிக்கை

இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அமைய ட்ரோன் கமராக்கள், காவல்துறையினர் புலனாய்வுப் பிரிவினர், கலகத் தடுப்பு காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் உதவி பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
இந்த போராட்டத்தின் போது வன்முறைகள் இடம்பெற்றால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
you may like this
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி